ஹர்ஷ பேரரசு
- குப்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு வடஇந்தியாவில் அரசியல் குழப்பம் நிலவியது.
- ஹீணர்கள் படையெடுப்புகளால் சீர்குலைந்த வடஇந்தியா பல சிற்றரசுகளாக உருவாகியது.
- சௌராஷ்டிரம் (குஜராத்) -ல் வல்லாபியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர்கள் மைத்ரேயர்கள்
ஆக்ரா, அயோத்தி – மௌகரியர்கள் ஆட்சி
மேற்கு தக்காணம் -வாகடகர்கள் ஆட்சி - இவர்களிடையே அரசியல் போட்டிகள் இருந்தபோதும், தில்லிக்கு வடக்கே சட்லஜ், யமுனை நதிகளுக்கிடையில் இருந்த “தானேஸ்வரம்* என்ற பகுதியானது. புஷ்யபூதியால் சுதந்திரமான அரசாக உருவாக்கப்பட்டது.
- புஷ்யபூதி குப்தர்களிடம் படைத்தளபதியாக இருந்தார்.
- ஹர்ஷரின் ஆட்சியில் தானேஸ்வரம் முக்கியத்துவம் அடைந்தது.
- இலக்கியச் சான்றுகள்:
- பாணரின் –
1.ஹர்ஷ சரிதம் சமஸ்கிருத நூல்(ஒரு அரசரின் வாழ்க்கை வரலாறை கூறும் முதல் நூல்)
- காதம்பரி
- ஹர்ஷர் நூல்கள் – பிரியதர்ஷிகா, நாகனந்தம், ரத்னாவளி ஆகிய நாடக நூல்கள்.
- யுவான் சுவாங் – சியூக்கி
கல்வெட்டுச் சான்றுகள்: - மதுபென் செப்புப் பட்டயம் -ஹர்ஷரின் காலத்தவை
சோன்பட் செப்பு முத்திரை – ஹர்ஷரின் காலத்தவை
பான்ஸ்கரா கல்வெட்டு – ஹர்ஷர் கையெழுத்துள்ளது. - நாளந்தா களிமண் முத்திரைக் குறிப்புகள்
புஷ்யபூதிகள்: - “வர்த்தனர் வம்சத்தை நிறுவியவர் – புஷ்யபூதி
தலைநகர் – தானேஸ்வரம்
புஷ்யபூதிக்கு பின் ‘பிரபாகர வர்த்தனர் ஆட்சிக்கு வந்தார்.
பிரபாகர வர்த்தனர் - மனைவி – யசோமதி தேவி
- மகன் – ராஜ்ய வரித்தனர் (கி.பி 605-606)
- மகன் – ஹர்ஷர் (கி.பி 606 -647)
- மகள் – ராஜ்ய ஸ்ரீ கணவர் கிரகவர்மன் (கன்னோசியை ஆண்ட மௌகாரி வம்ச அரசர்) (கான்பூருக்கு அருகே உள்ளது)
- வங்காளத்தை ஆண்டு வந்த கௌட அரசன் சாசங்கனால் கிரசுவர்மன் கொல்லப்பட்டார். (சாசங்கனுக்கு உதவியவர் மாளவ அரசன் தேவகுப்தன்)
பின்னர் ராஜ்ய வர்த்தனர் மாளவ அரசன் மீது போர் தொடுத்து வென்றார். ஆனால் சசாங்கனின் சதியால் ராஜ்யவர்த்தனர் கொல்லப்பட்டார். - ராஜ்ய வர்த்தனரின் இறப்புக்கு பின் ஹர்ஷவர்தனர் தானேஷ் வரத்தின் அரசனார்.
ஹர்ஷர் (606-648) - கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரை படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தனர்.
- ஹர்ஷர் “அவலோகிதேஷ்வர போதி சத்வரின்” அறிவுரைப்படி “ராஜ்புத்திரர், சிலாதித்யர்” ஆகிய பட்டங்களுடன் அரியணை ஏறினார்.
- ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தானேஷ்வரமும், கன்னோசியும் ஒன்றாக இணைக்கப்பட்டன.
பின்னர் தனது தலைநகரை கன்னோசிக்கு இடம் மாற்றினார்.
படையெடுப்புகள்: - ஹர்ஷர் அரியணை ஏறியபோது அவறின் வயது 16 (41 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- முதல் படையெடுப்பு சசாங்கனுக்கு எதிராக போர்தொடுத்து கன்னோசியிலிருந்து விரட்டியடித்தார். இப்போரில் ஹர்ஷர்க்கு உதவியவர் – காமரூம் அரசன் பிரகியோதிஷர் (அ) பாஸ்கர வர்மன்.
- மாளவத்தைச் சேர்ந்த தேவகுப்தரின் தீய திட்டங்களுக்கு அஞ்சி ஹர்ஷரின் சகோதரி விந்திய மலைக்கு தப்பி சென்றார்.
தேவகுப்தரை கொன்று ராஜ்ய ஸ்ரீயை மீட்டார். - ராஜ்ய ஸ்ரீயை கன்னோசிக்கு அழைத்து வந்தார். பின்னர் ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவினார்.
- ஹர்ஷருக்கும். மைதரகர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகைமை ஹர்கரின் மகளுக்கும். துருவபட்டருக்கும் இடையில் நடந்த திருமண உறவின் மூலம் முடிவுக்கு வந்தது.
- சாளுக்கிய மன்னன இரண்டாம் புலிகேசியிடம் பொ.ஆ 637 ல் நடைபெற்ற “நர்மதை நதிக்கரை போரில் தோல்வி அடைந்தார்.
இவ்வெற்றிற்கு பின் இரண்டாம் புலிகேசி “பரமேஸ்வரன்” என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
ஹர்ஷரின் சீன உறவு: - ஹர்ஷரின் சமகால டான்ங் பேரரசர் டாய்சுங் கி.பி 643 (ம) கி.பி 647 -ல் ஹர்ஷரின் அவைக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார்.
- இரண்டாவது முறை சீன தூதுவர் வந்தபோது ஹர்ஷர் இறப்பு.
- ஹர்க்கருக்கு பின் ஆட்சி, தகுதியற்ற ஒரு நபரால் கைப்பற்றப்பட்டது.
- சீனதூதர் அவரை அகற்றும் பொருட்டு நேபாளம், அஸ்ஸாம் சென்று படையைத் திரட்டினர்.
- சீனர்களின் தலைநகரமான “சியான்” மாபெரும் கலை (ம) கல்விக்கான மையமாக திகழ்ந்தது.
அரசு நிர்வாகம்:
வரலாற்றாசிரியர் “பர்ட்டன் ஸ்டெய்ன்” கூற்றுப்படி “மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகம்” என்பது வல்லமை மிக்கதாக குப்தர்களின் ஆட்சி காலத்திலும் இருந்திருக்கவில்லை என்றார்.
பேரரசின் பிரிவுகள்: - ஹர்ஷ பேரரசு -பல மாகணங்கள் – பலபுக்திகள் – விஷயங்கள் (மாவட்டம்) -> பாதகாக்கள் – கிராமம்
- உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்ட அதிகாரிகள் பலர் குறித்து “ஹர்ஷ சரிதம்” குறிப்பிடுகிறது.
- உள்ளாட்சி நிர்வாகம் கவனித்துக்கொண்டவர்களின் பட்டங்கள்
- போகாபதி
- அபுக்தா,
- பிரதிபாலர்- புருஷா
நகரங்கள் சிறுநகரங்கள்:
- இந்திய நகர, சிறுநகரங்கள் ஆகியவற்றின் அமைப்பு, அழகியல் பாதுகாப்பு நடைமுறை பற்றி – யுவான் சுவாங் தனது நூலில் விவரிக்கிறார்.
- “பாடலிபுத்திரம்* அதன் செல்வாக்கை இழந்தது. “கன்னோசி” அதன் இடத்தை பிடித்துக் கொண்டதை “யுவான் சுவாங்” கூறுகிறார்.
அமைச்சரவை: - முதன்மை அமைச்சர் பதவியே அமைச்சர்களில் மிக முக்கியமான பதவியாகும்.
1) அவந்தி – அயலுறவு (ம) போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
2) சிம்மானந்தா – படைத்தளபதி
3) குந்தலா – குதிரைப்படைத் தலைவர்.
4) ஸ்கந்த குப்தர் – யானைப்படைத் தலைவர்
5) திர்கத்வஜர் – அரச தூதுவர்கள்
6) பானு – ஆவணப் பதிவாளர்கள்
7) மஹயிரதிஹரர் – அரண்மனை காவர்களின் தலைவர்
8) சர்வகதர் – உளவுத் துறை அதிகாரி. - ஹர்சரின் அவையை அலங்கரித்தவர்கள் – பாணர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர்.
- நிலோ பிது – அரசு ஆவணக் காப்பகம்
படை நிர்வாகம்: - ஹர்ஷரின் படை நான்கு பிரிவுகளாக (சதுரங்கம்) பிரிக்கப்பட்டிருந்தது.
காலாட்படை, யானை, குதிரை, தேர்படை. - சாதாரண படைவீரர்கள் “சாடர், பாடர்” என அழைக்கப்பட்டனர்.
- குதிரைப்படை அதிகாரிகள் – பிரகதீஷ் ரைர்
- காலட்படை அதிகாரிகள் – பாலதிக்ரிதர் (ம) மகா பாலதிகரிதர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
- படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் பற்றி யுவான்சுவாங் பதிவுசெய்துள்ளார்.
நீதி நிர்வாகம் - சட்டங்களை விசாரித்து நீதி வழங்க மீமாம்சகர்கள் எனப்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.
- ஹர்ஷர் கால முக்கிய தண்டனைகளும், நீதி விசாரணை முறைகளையும் யுவான் சுவாங்” பதிவு செய்துள்ளார்.
- மரண தண்டனை தவிர்க்கப்பட்டது.
வருவாய் நிர்வாகம் - பாகா, ஹிரண்யா, பலி என்று மூன்று வகையான வரிகள் ஹர்ஷரின் ஆட்சியில் வசூலிக்கப்பட்டன.
- பகா -விளைச்சலில் 1/6 பங்கு நிலவரி
- ஹிரண்யா – விவசாயிகள், வணிகர்கள் பணமாக செலுத்தப்பட்ட வரி
- பலி – இவ்வரி பற்றி குறிப்பு எதுமில்லை.
அரச நிலத்தின் 4 வகைகள்:
பாகம் 1 – அரசு விவகாரங்களை நடைமுறைப்படுத்துவது.
பாகம் 2 – அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதற்கானது.
பாகம் 3 – அறிவில் சிறந்தவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கானது.
பாகம் 4 – மத நிறுவனங்களின் அறச் செயல்களுக்கு அளிப்பதற்கானது. - பொ.ஆ. 632 – ல் செப்பு பட்டயக் குறிப்புகள் 2 பிராமணருக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதை தெரிவிக்கிறது.
இதன் பாதுகாவலர் மகாசமந்தர்கள்
மதக் கொள்: - ஹர்ஸர் பொ.ஆ 631 வரை சிவனை வழிபட்டு வந்தார்.
- ராஜ்ய ஸ்ரீ யுவான் சுவாங் காரணமாக பௌத்த மதத்தை தழுவினார். (இந்தியாவில் பொத மதத்தை பின்பற்றிய கடைசி அரசர் – ஹர்சர்)
- மகாயாணா பிரிவை பின்பற்றினார்.
- விலங்குகளை கொல்வதும், மாமிசம் உண்பதும் தடை செய்யப்பட்டன.
- புத்தர், சிவன், சூரியன் ஆகிய உருவங்களை ஒரே நேரத்தில் வழிபட்டார்.
- பொ.ஆ 643 -ல் இரண்டு பொத்த மதக் கூட்டங்களை கூட்டினார். இதில் பொ.ஆ 643 ல் நடைற்ற கன்னோசி மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யுவான் சுவாங்
- கன்னோசி கூட்டத்தில் காமரூபத்து அரசன் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட இருபது அரசர்கள் பங்கு கொண்டனர். 23 நாட்கள் நடந்தது – 3000 ஹீனயான, மகாயான (ம) சமணர் பிராமண சமயத்தினர் கலந்து கொண்டனர்.
- தங்கத்தாலான புத்தரின் சிலை ஒரு மடாலயத்தில் நிறுவப்பட்டது. அதோடு புத்தரின் மூன்று அடி உயர சிறிய சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பிரயாகை: (பொ.ஆ 643) - 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் “மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட பௌதிக மதக் கூட்டத்தை “பிரயாகையில்” கூட்டினார்.
- ஹர்ஷர் தன்னிடமுள்ள அனைத்து செல்வத்தையும் வாரி வழங்கினார்.
- கூட்டம் நடந்த 4 நாள்களிலும் எண்ணற்ற பரிசுப்பொருட்களை வழங்கினார்.
- மக்களுக்கு முமுமையான வழிபாட்டு சுதந்திரம் இருந்தது – யுவான்சுவா
சாதி அமைப்பு முறை:
யுவான் சுவாங் கூற்றுபடி சமுதாயத்தில் 4 பிரிவினருக்கான தொழில்கள் முற்காலத்தில் இருந்ததைப் போலவே தொடர்ந்தன.
பெண்கள் நிலை: - யுவான் சுவாங் பதிவு, பெண்கள் நிலை குறித்தும், திருமண முறைகள் குறித்தும் தகவல்களை அளிக்கிறது.
- பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது ஆனால் உயர் வருப்புனர் மத்தியில் இல்லை.
- உடன் கட்டை ஏறும் (சதி) வழக்கம் இருந்தது.
- “பிரபாகரவர்த்தனர்” மனைவி “யாசோமதிதேவி” தனது கணவர் இறந்த பிறகு இவ்வாறு உடன்கட்டை ஏறினார்.
கல்வி: - சமஸ்கிருதம், கற்றறிந்தோர் மொழியாக இருந்தது.
- கல்வி கற்கும் வயது 9 முதல் 30 வரை இருந்தது.
- ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தில் நாளந்தா பல்கலைகழகம் புகழின் உச்சத்தை அடைத்தது.
யுவான் சுவாங்: - 612 ல் பிறந்து 20 வயதில் துறவியானர்.
- சீனப் பயணி – புனித யாத்ரீகர்களின் இளவரசர், பயணிகளின் இளவரசர்” என அறியப்பட்டார்
- 13 ஆண்டுகள் இந்தியாவில் தங்கினார் (பொ.ஆ. 630-643)
- இந்தியாவை சந்திரபூமி என்றழைத்தார்.
- இந்தியாவில் முதன் முதலாக வந்த இடம் – காந்தாரம்
- ஹர்ஷர், யுவான் சுவாங் – ஐ முதன் முதலாக ராஜ்மகாலுக்கு (ஜார்கண்ட்) அருகேயுள்ள “கஜன்கலா” என்ற இடத்தில் சந்தித்தார்.
- யுவான் சுவாங் வருகையின் போது நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராக “சிலா பத்ரர்” இருந்தார்.
- யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றவை.
1) 150 பொருட்கள்
2) தங்கம், வெள்ளி, சந்தனத்திலான புத்தரின் உருவச்சிலைகள்.
3) 657 தொகுதிகள் கொண்ட அரிய கையெழுத்துப் பிரதிகள்.
சியுகி யுவான் சுவாங்:
ஹர்சரின் ஆட்சி காலத்தின் போது நிலவிய சமூகம், பொருளாதாரம், மதம், பண்பாடு குறித்த விரிவான செய்திகளை இந்நூல் தருகிறது. - நன்றி வணக்கம்………..