வங்கி

- வங்கி என்பது பணத்தை தன்னகத்தே வைத்து கொள்வதற்கும், கடன் கொடுப்பதற்கும் மற்றும் பரிவர்த்தனை போன்றவற்றை செய்யும் நிறுவனம் ஆகும்.
- உலகில் தொடங்கப்பட்ட முதல் மைய வங்கி ஸ்வீடன் ரிக்ஸ் வங்கி (1656)
- இம்மைய வங்கி 1897 ம் ஆண்டு பணத்தை வெளியிட முழு உரிமையை பெற்றது.
- 1864 ல் தோற்றுவிக்கப்பட்டு பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கி!
- 1920 -ம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் நகரில் கூட்டப்பட்ட பன்னாட்டு நிதிய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 1921 முதல் 1954 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பெரும்பாலான மையவங்கி அமைப்புகள் பல்வேறு நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டன.
இந்திய வங்கிகளின் வரலாறு:
- இந்தியாவின் முதல் வங்கி – ஹிந்துஸ்தான் வங்கி (1770)
- இந்தியாவில் உள்ள வங்கிகள் அமைப்பு, பிரிசிடென்சி (Presidency Banks) வங்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டது.
மூன்று பிரிசிடென்சி வங்கிகள்:
1. (Bank Of Bengal) -1809
2. (του (Bank of Bombay)-18-40
3. Glerodromeat stil (Barik of Madras) -1843
- மேற்கண்ட மூன்று வங்கிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு பிரிசிடென்சி வங்கிகள் என அழைக்கப்பட்டன.
- ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு 1921 (இம்பீரியல் வங்கி என அழைக்கப்பட்டது)
வணிக வங்கிகள்:
- மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று பேரளவில் உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனை அளிக்கும் நிதி அமைப்பு.
- வணிக வங்கிகள் நீண்டகால கடனை அளிப்பதில்லை.
- வணிக வங்கிகள் லாப நோக்கம் கொண்டவை.
- வணிக வங்கிகளின் முதன்மை பணிகள்:
- வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்(கேட்பு வைப்புகள், கால வைப்புகள் கடன் வழங்கல்
வணிக வங்கியின் இரண்டாம் நிலை பணிகள்:
1. காசோலைகளை பணமாக்குதல்
2. வருமானத்தை பெறுதல்
3. செலவுகளை செலுத்துகிறது.
4. பாதுகாப்பு பெட்டக வசதி
5. பயணக் காசோலைகளை வழங்குதல்.
6. அந்நியச் செலாவணியைக் கையாளுதல்,
7. கடன் உறுதியளிப்பு கடிதம்
8. பத்திரங்களுக்கு எழுத்துறுதி வழங்குதல்.
இதர பணிகள்:
1. பண அளிப்பு
2. கடன் உருவாக்கம்
3. புள்ளிவிவரங்களை திரட்டுதல்
பொருளாதார வளர்ச்சியில் வணிக வங்கிகளின் பங்கு:
1. மூலதன திரட்சி :
வணிக வங்கிகள் தனது வங்கிப் பிரிவுகளின் கீழ் பரவலாக செயல்பட்டு, பொதுமக்களின் சேமிப்பினை வைப்புகளாக பெற்று அவற்றை உற்பத்தி நோக்கத்திற்காக கடன்களாக வழங்குகின்றன.
2. கடன் உருவாக்கம்:
கடன் உருவாக்கம் மூலம், வங்கிகள் முன்னேற்ற திட்டங்களுக்கு அதிக நிதியை பெற்று தருகின்றன.
3. அதிக உற்பத்திதிறனை கொண்ட முதலீட்டை நோக்கி பணத்தை முறைப்படுத்துதல்.
4. சரியான தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்.
5. கடனை பணமாக்குகிறது.
6. அரசிற்கு நிதி வழங்குகிறது.
7. வேலைவாய்ப்பினை உருவாக்குதல்
8. வங்கிகள் தொழில் முனைவினை ஊக்கப்படுத்துகிறது.
வங்கியில்லாத நிதி நிறுவனங்கள். (NBFIS – Non Banking Financial Institutions)
- NBFI முழு வங்கிக்கான உரிமம் கொண்டதும் அல்ல மற்றும் மைய வங்கியால் கண்காணிக்கப்படுவதும் இல்லை.
- வங்கியில்லாத நிதி நிறுவனங்கள். வங்கிப் பணிகளைச் செய்யாமல் மற்ற நிதி பரிமாற்றங்களை மேற்கொள்கிறது.
- இரண்டு வகைப்படும் :
1. பங்கு சந்தை மற்றும் இதர நிதி நிறுவனங்கள்
2. நிதி கழகங்கள். சீட்டு நிறுவனங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி (மைய வங்கி RBI (Reserve Bank of India

- 1920 ம் ஆண்டு புரூசெல்ஸ்ஸில் நடைபெற்ற சர்வதேச பணம் பற்றிய மாநாட்டில் ( International monetary conference) ஒவ்வொரு நாட்டிலும் பாங்க் ஆப் இங்கிலாந்து போல ஒரு மைய வங்கி அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தியது.
- RBI – Reserve Bank of India (15 Young Commission – Royal commission Hilton
- RBI யின் மாதிரி வங்கி பாங்க் ஆப் இங்கிலாந்து
- வங்கிகளின் செயல்பாடு, வங்கிகளின் அடிப்படை கோட்பாடுகளை கொண்டுள்ளதால் வங்கிகளின் தாய். உலக வங்கிகளின் தாய் என பாங்க் ஆப் இங்கிலாந்து அழைக்கப்படுகிறது
- 1934 ல் ஆண்டு சட்ட விதிப்படி 1935 ம் ஆண்டு ஏப்ரல் 1- ம் தேதி RBI அமைக்கப்பட்டது.
- 1937-ல் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
- RBI யின் தலைமையிடம் மும்பை
- ஜனவரி 1, 1949 ம் ஆண்டு RBI தேசியமயமாக்கப்பட்டு மத்திய அரசுக்குச் சொந்தமானது.
- RBI ல் 1 கார்ணர், 4 துணை சுவர்ணர்கள், 14 இயக்குநர்கள் பதவியில் இருப்பர்.
- RBI யின் நிர்வாகம் மற்றும் மத்திய குழுவின் தலைவர் கவர்னர் ஆவார்.
- ஒஸ்போர்ன் ஸ்மித் RBI ன் முதல் கவர்னர் ஆவார்.
- தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ் (25)
- உர்ஜித் பட்டேல் (24), ரகுராம் ராஜன் (23)
- RBI யின் கிளைகள் சென்னை, கல்கத்தா, டெல்லி,
RBI -யின் நிர்வாகம்
- மைய வங்கி மற்றும் இந்திய வங்கிகளின் நெறியாளர்
- கடைரி நிலை கடன் ஈவோன்
- RBI ஆனது ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள் மற்றும் மைய அரசால் நியமிக்கப்படும் மைய நிர்வாகக் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
RBI -பணிகள்
- காகிதப்பணம் வெளியிடுதல்
- அரசின் வங்கியாக செயல்படுதல் (அரசிற்கான நிதி வருவாயை பெற்றுக் கொள்ளுதங் மற்றும் அரசின் செலவினங்களுக்கு பணம் வழங்குதல்)
- இந்திய வங்கி அமைப்புகளை நெறிப்படுத்துதல்
- அந்நிய செலாவணியின் பாதுகாவலன்
- கடன் அளிப்பை நெறிப்படுத்துதல்.
- 18 ம் நூற்றாண்டில் காகிதப்பணம் வெளியிடும் முறை துவங்கியது. தனியார் வங்கிகளான வங்கான வங்கி, மும்பை வங்கி மற்றும் சென்னை வங்கிகள் காகிதப் பணத்தை அச்சடித்தது.
- ஷெர்ஷா சூரி என்பவரால் ரூ 1 க்கு 40 செம்பு நாணயங்கள் என்ற விகிதத்தில் முதல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.
- சமஸ்கிருத சொல்லான ரெசுப்பியா (Raupya)விலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.
- ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். முன்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் பின்பக்கத்தில் மற்ற 15 மொழிகளிலும் இருக்கும்.
- RBI அந்நிய செலாவணி இருப்புகளை பாதுகாக்கும் பணியினை செய்கிறது.
- 1999 -ம் ஆண்டு இயற்றப்பட்ட அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் படி அந்நியச் செலாவணியை (FEMA Foreign exchange management ACT) (διοσυπσ0010 செய்கிறது
- பணவியல் கொள்கையை வெளியிடுகிறது.
- சர்வதேச பண நிதியத்தின் (International Monetary fund IMF) இந்திய பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி விளங்குகிறது.
- 1995-ல் RBI வங்கி குறை தீர்ப்பாய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- RBI க்கு வரும் புகார்களை இந்த தீர்ப்பாயம் கலைகின்றது.
RBI யின் பணம் சாராத பணிகள்
1. வங்கிகளை மேற்பார்வையிடுதல்
2. வங்கிகளுக்கு உரிமம் வழங்குகிறது.
3. வங்கி கிளை திறப்பிற்கு அனுமதி வழங்குகிறது.
4. NBFI (Non Banking Financial Institutions)-
5. பணம் மற்றும் நிதி அறிக்கையை ஆண்டிற்கு ஒரு முறை வெளியிடுகிறது.
6. RBI கூட்டுறவு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்குகிறது.
7. IMF மற்றும் உலக வங்கிகளுக்கு முகவராக செயல்படுகிறது.
8. பணக்கொள்கையை அறிவிக்கும், அமல்படுத்தும்.
9. RBI பணக்கொள்கைளை 6 மாதத்திற்கு ஒரு முறை வெளியிடும்.
RBI – கடன் கட்டுப்பாட்டு கருவிகள்.
1. Bank Rate- வங்கி வீதம்
2. CRR (cash Reserve ratio)
3. SLR (Statutory Liquidity Ratio)
4. Repo rate – RBI வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் மற்றும் வட்டி
5. Reverse Repo Rate- வணிக வங்கிகளிடம் இருந்து வாங்கும் கடனுக்காக RBI கொடுக்கும் வட்டி விகிதம்.
RBI இதர பணிகள்
1. கடன். விவசாயம் சார்ந்த தொழிற்சாலை பற்றிய பிரச்சினைகளை ஆய்வு செய்கிறது மற்றும் ஆலோசனை வழங்குகிறது.
2. கூட்டுறவு சங்கத்திற்கு ஆலோசனைகளை NABARD மூலம் வழங்குகிறது.
3. RBI இலாப நோக்கமற்ற வங்கி.
4. RBI-யின் முதல் நோக்கம்- சேவை.
இரண்டாவது நோக்கம்-இலாபம்.
இந்திய ரிசர்வ் வங்கியும் கிராமப்புற கடனும்:
- இந்திய ரிசர்வ் வங்கி விவசாயத்துறைக்கான நிதியளிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்திய ரிசர்வ் வங்கி விவசாயத்திற்கென தனியான விவசாய கடன் துறையை துவங்கியுள்ளது.
விவசாய கடன் துறையின் பணிகள்:
- நிபுனத்துவம் பெற்ற அலுவலரை நியமித்து விவசாய கடன் தொடர்பான அனைத்து வினாக்களையும் ஆய்வு செய்கிறது.
- அனைத்து வங்கிகளுக்கும் நிபுனத்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழக்குகிறது.
- ஊரகத்துறைக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக விவசாயகடன் வழங்குவது மேலும் அவைகளை ஒருங்கினைப்பது ஆகும்.
- இந்திய ரிசர்வ் வங்கி விவசாயிகளுக்கு நேரடியாக கடனை வழங்காமல் மத்திய கூட்டுறவு வங்கி. மாநில கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை வங்கி போன்ற வங்கிகள் மூலமாக வழங்குகிறது
- 1982 ம் ஆண்டிற்கு பிறகு விவசாய கடன் சம்பந்தமான அனைது பொறுப்புகளையும் நபார்டு வங்கி (NABARD) இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து பெற்றுக்கொண்டது. அதிலிருந்து ஊரக கடன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நபார்டு வங்கி மேற்கொண்டுள்ளது.
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஜூலை 1 – 1963
- விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்துகிறது.
- மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் போன்ற (Scheduled Banks) தகுதிவாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது.
- இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நில வள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கி அதன் மூலம் நிதியளிப்பினை செய்கிறது.
வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRB’S)
- ஊரக நிதி வழங்கும் நிறுவனங்களில் முக்கியமான வங்கியமைப்பு வட்டார ஊரக வங்கிகள் ஆகும். இது கிராமின் வங்கிகள் என அழைக்கப்படுகின்றன.
- பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் 20 அம்ச பொருளாதார திட்டத்தில் இதுவும் ஒன்றாகும்.
- 1975- ல் வட்டார ஊரக வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு, இவைகளுக்கான மூலதனமனது 50% மைய அரசாலும் 15% மாநில அரசாலும் 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.
- RRB -யின் நோக்கம் சிறு குறு விவசாயிகள், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குகிறது.
- RRB 8.5% சதவிகித வட்டியில் கடன்களை வழங்கி வருகின்றது.
- RRB 3 சதவிகித ரொக்க இருப்பினையும். 25% சட்டபூர்வ நீர்மை இருப்பினை வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
- நபார்டு வங்கி மூலம் இவைகளுக்கு கடன்களையும் வழங்கி வருகின்றன.
விவசாய கடனுக்கான NABARD வங்கியின் பங்கு:
- 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான (National Bank for agricultural and Rural Development Bank) தேசிய வங்கியானது 1982 ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தோற்றுவிக்கப்பட்டது.
- RRB- யின் மறுகடன் பணிகளையும் தானே ஏற்று செய்து வருகிறது.
- விவசாய கடன்களுக்கான தலைமை அமைப்பாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது.
NABARD
/
மத்திய கூட்டுறவு வங்கி
/
மாநில கூட்டுறவு வங்கி
/
துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
- RBI மின் துணை ஆளுநர் நபார்டின் தலைவராக இருப்பார்.
NABARD – வங்கியின் பணிகள்
- ஊரக வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் ஊரக தொழில் நடவடிக்கைகளுக்கான மறுகடனை வழங்குகிறது.
- கூட்டுறவு வங்கிகள், RRBS, நில வள வங்கிகளுக்கு குறுகிய கால. மத்திய காப் நீண்டகாய் கடனை வழங்குகிறது.
- மாநில அரசுக்கு 20 ஆண்டு கால நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
- RRB மற்றும் துவக்க வேளாண்மை சங்கங்களை தவிர்த்த, அணைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்யும் பணியினை செய்கிறது.
- வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.
தொழில் நிதிக்கான இந்திய அளவில் உள்ள நிறுவனங்கள்:
1. இந்திய தொழில் நிதி கழம் (IFCI Indian Finance Corporation of India)
- தொழில் மேம்பாட்டிற்கான முதல் நிறுவனம்
- ஜூலை 1-1948 ல் தொடங்கப்பட்டது.
- நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
- உரிமைப் பங்குகள். முன்னுரிமைப் பங்குகள், கடன் பத்திரங்களுக்கு ஒப்புறு யளிக்கிறது.
- மேற்கண்ட பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்குகிறது.
- இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படும் தொழிற்துறை இயந்திரங்களுக்கான பணத்திற்கு உத்திரவாதம் அழிக்கிறது.
- இந்திய தொழில் நிதி கழகம், தொழில் தொடங்க நிதியினை குறைந்த வட்டிவிகிதங்களில் வழங்குகின்றது.
2. இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (ICICI Industrial Credit and Investment Corporation of India)
- ஜனவரி 5, 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பணிகள்.
1. தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல்
2. அந்நிய செலாவணி கடன்கள் வழங்குதல்
3. வர்த்தக வங்கிப் பணிகள்
4. கடன் பெற சான்று வழங்குதல்
5. திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடு செய்தல்
6. வீட்டு வசதி கடன்கள் வழங்குதல்
7. குத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
இந்திய தொழில் மேம்பாடு வங்கி (Industrial Development Bank of India (IDBI))-1964
- தொழில் முன்னேற்ற வங்கியின் தலைமை வங்கி
- 4 பிப்ரவரி 15, 1976 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பாக இருந்தது.
பின்னர் இது பிரிக்கப்பட்டு அதே ஆண்டின் பிப்ரவரி 16 முதல் இந்திய அரசிற்குசொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது.
பணிகள்:
1. மற்ற தொழில் நிதி நிறுவனங்களுக்கு நிதி அளிக்கிறது.
2. தொழிற் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ, இணைந்தோ கடன் வழங்குகிறது.
- இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி சிறப்பு செயல்பாடாக வளர்ச்சி உதவி நிதி (Development Assistant Fund) என்ற ஒரு சிறப்பு நிதியை உருவாக்கியுள்ளது.
- 1982-ல் EXIM – (ஏற்றுமதி இறக்குமதி வங்கி) துவங்கப்படும் வரை, ஏற்றுமதிக்கான நிதி உதவியையும் இவ்வங்கி வழங்கி வந்தது.
மாநில அளவிலான நிறுவனங்கள்:
3. மாநில நிதிக்கழகங்கள் (State Finance Corporations)
- 1951 ம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்ட மாநில தொழில் நிதிக்கழக சட்டத்தின் படி பல்வேறு மாநிலங்களில் தொழில்நிதி கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதன் நோக்கம் அந்தந்த மாநிலங்களில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிை ஏற்படுத்துவதாகும்.
- ஒருகோடி ரூபாய்க்குள் பங்கு மூலதனத்தையும் இருப்புகளையும் கொண்ட நிறுவனங்களுக்கு கடன்களை (ரூ. 60 லட்சம் ) வழங்குகிறது.
b. SIDCO (Small Industries Development Corporation) மாநில தொழில் மேம்பாட்டு கழகங்கள்
- அந்தந்த மாநில அரசுகளுக்கே உரிமையானது.
- கடன் அளிக்கிறது. தொழில்மயமாதலை தூண்டுகிறது
- தொழிற் பயிற்சி, மேம்பாட்டு பணிகளையும் இக்கழகம் மேற்கொள்கிறது.
- தனியார் பங்கேற்பை அனுமதிக்கும் கூட்டுத் திட்டங்களையும் இக்கழகம் ஊக்குவிக்கிறது.
- தொழிற்பேட்டைகள் அமைப்பது, புதிய தொழில் மையங்களை அமைப்பது. மாநில அரசின் மானியங்களை நிர்வகிப்பதும் இக்கழகத்தின் பணியாகும்.
வங்கிதுறையின் சமீபகால முன்னேற்றங்கள்:
1. E-Banking (மின்னனு வங்கி முறை)
- Internet Banking (இணைய வங்கிமுறை) நிகழ்நிலை வங்கிமுறை (Online Banking) என்றும் அழைக்கப்படுகிறது.
- இம்முறையில் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை நேரில் செல்லாமல் இணையதளத்திலேயே நிகழ்த்துவது ஆகும்.
2. RTGS – Real Time Gross Settlement (நிகழ்நிலை வங்கி)
- பணத்தினை விரைவாக மாற்றும் முறையாகும்
- நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் என அழைக்கப்படுகிறது
- பரிவர்த்தனைக்காக காத்திருக்கும் நேரம் ஏதும் இல்லாமல் நிகழ்நேரத்திலேயே கணக்கீடு எதும் இன்றி நடைபெறுகிறது.
3. NEFT – National Electronics fund Transfer:
- தொகுப்பாக பரிமாற்றம் செய்யப்படுகிறது எனவே தாமதமாகும்
- குறைந்தபட்ச அளவு கிடையாது.
- RTGS-ல் குறைந்தபட்சம் அனுப்பும் தொகை 2 லட்சம் ஆகும்.
4. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM Automated Teller Macheine)
- 1967 ம் ஆண்டு தானியங்கி பணம் வழங்கும் இயந்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- அடுத்த தலைமுறை தானியங்கி பணம் வழங்கும் முறை நேரடித் தொடர்வினை தவிர்ப்பதாக இருக்கும்.
5. Quero (Paytm)
- இந்திய மின்னணு வர்த்தக பணம் வழங்கும் முறை
- பணம் வழங்கும் வங்கி என்பதன் விரிவாக்கம் பேடிஎம் எனப்படுகிறது.
- ஆகஸ்ட் 2015 ல் இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்றுஆரம்பிக்கப்பட்டதாகும்.
6. பற்று அட்டை (Debit Card) கடன் அடை (Credit Card)

- பற்று அட்டை என்பது வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கிலிருக்கும் பணத்தை, தானியங்கி இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது. போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டையாகம்
- கடன் அட்டை என்பது அந்த அட்டையை வழங்கிய நிறுவனத்தில் உறுதியளித்த நபர்களால் பெறப்படும் அட்டையா
- கடன் அட்டையை கொண்டு பொருட்கள் மற்றும் பணிகளுக்கான கட்டணங்களை செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையுடன் ஒத்துக்கொள்ளப்பட்ட கூடுதல் கட்டணத்தையும் சேர்த்து பின்னர் கடன் அட்டை வழங்கிய நிறுவனத்துக்கு அவர் செலுத்த வேண்டும்.
7. செயல்படாத சொத்து (Non -Performing Assets)
- கடன் வாங்குபவர் தொடர்ந்து 90 நாட்களில் வட்டியோ அல்லது கடன் தொகுதியின் பகுதியையோ செலுத்தாமல் இருந்தால் அதை செயல்படாத சொத்து என்கிறோம்.
- இவ்வகையான செயல்படா சொத்துக்கள் நிதி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் எனெனில் அவைகள் தங்கள் வருமானத்திற்கு கடனுக்கான வட்டியை சார்ந்தே இருக்கும்
- இப்பொழுது அவ்வகை சொத்துகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது.
- இதை சரி செய்ய இந்திய அரசு ஏழை மக்களின் வரிப்பணத்தினை பயன்படுத்தி அப்பற்றாக்குறையை சரி செய்யும் நிர்பந்தாத்திற்கு ஆண்கிறது.
வங்கிகள் தேசியமையம்
- முதன் முதலில் தேசியமையமாக்கப்பட்ட வங்கி – RBI (ஜனவரி 1. 1949)
- இரண்டாவதாக 1955 ல் SBI வங்கி தேசியமையம்யமாக்கப்பட்டது.
- மூன்றாவதாக 1969 ஜூலை 19 ல் 14 வங்கிகள் தேசியமையமாக்கப்பட்டது.
- நான்காவதாக 1980 ஏப்ரல் 15 ல் 6 வங்கிகள் தேசியமையமாக்கப்பட்டது.
- 1993-ல் நியு பேங்க் ஆப் இந்தியா பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
வங்கிகள் தேசிய மையம் ஆக்கப்பட்டதற்கான காரணணங்கள்:
- விவசாய கடன் வழங்க
- சிறு தொழிலை மேம்படுத்த
- அனைத்து இடங்களிலும் வங்கிகளை திறக்க
- பிற்பட்ட பகுதிகளை மேம்படுத்த
பொதுதுறை வங்கிகளின் குறைபாடுகள்
1. அரசின் அதிக கட்டுப்பாடு
2. மிக பழைய வங்கி நடைமுறை
3. புதிய வங்கியுடன் போட்டி
4. அதிகார வர்க, அரசியல் வர்க தலையீடு.
5. அதிக ஊரா கடன் ( Bad Debts
வங்கிகள் இணைப்பு
- 2017 ம் ஆண்டு மைய அரசின் அமைச்சரவைக் குழு கூடி, இந்திய ஸ்டேட் வங்கி குழுவின் ஐந்து இணை வங்கிகளை இணைப்பதற்கான முடிவை எடுத்தது. 5- இணை வங்கிகளுடன் பாரத ஸ்டேட் வங்கியாக ஏப்ரல் 1. 2017 முதல் செயல்படத் தொடங்கியது.
- இந்த இணைப்பினால் உலகிலுள்ள முதல் 50 வங்கிகள் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியும் இடம் பெற்றது.
- இணைக்கப்பட்ட வங்கிகள்
1. பைக்கனர் ஸ்டேட் வங்கி
2. ஜெய்பூர் ஸ்டேட் வங்கி
3. மைசூர் ஸ்டேட் வங்கி
4. பாட்டியாலா ஸ்டேட் வங்கி
5. திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
- ஏப்ரல் 2019ல் விஜயா வங்கியும், தீனா வங்கியும் பாங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டது.
- 27 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வங்கி சீர்திருத்தத்தின் மூலமாக ஏப்ரல் 1, 2020 முதல் 12 பொது துறை வங்கிகளாக குறைக்கப்பட்டது.
- 2021 இல் அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
- RBI இரண்டாவது பட்டியலில் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள். அனைத்து வங்கிகளும்
- இந்திய வங்கிகள் பெரும்பாலும் பொதுத்துறையை சார்ந்தவை ( 90% பொது வங்கி நடவடிக்கை)
12 பொதுத்துறை வங்கிகளின் மற்றும் தலைமையிடம்(PSBS)
1. பஞ்சாப் நேசனல் வங்கி டெல்லி
2. இந்தியன் வங்கி சென்னை
3. SBI – மும்பை
4. கனரா வங்கி -பெங்களூரு
5. Union Bank of India – (ιρώσο
6. Indian Overseas Bank
7. UCO Bank
8. Bank of Maharastra –
9. பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி – டெல்லி (Rajendra Plane)
10. Bank of India (
11. Central Bank of India (pbσου
12. Bank of Baroda
பணச் சந்தை (Money Market)
- அதிக நீர்மைத் தன்மையை கொண்டதும். குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக் கருவிகளை கையாளும் சந்தையே பணச்சந்தை எனப்படுகிறது.
- ஒரு நாள் முதற்கொண்டு ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் நிதிக்கருவிகள் இச்சந்தையில் கையாளப்படுகின்றது.
- இங்கு கையாளப்படும் நிதிகருவிகள் அரசுப் பத்திரங்கள், அழைப்பு பணம். வணிகப் பத்திரங்கள், வைப்புச் சான்றுகள், வங்கியாளர் ஏற்புகள் மாற்று சீட்டகள், மறு வங்கள் ஒப்பந்தங்கள், கருவூல உறுதிச் சீட்டுக்கள் அந்நிய செலாவணிகள் போன்றவை ஆகும்.
- இலைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சி அடையும் வகையிலான கருவிகள் ஆகும்.
- RBt. வணிக வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் இதர அமைப்புசளர் நிதி நிறுவனங்கள் ஆகியவை குறுகிய கால பணச்சந்தையில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றது.
5 (Capital Market)
- நீண்டகால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் சந்தை மூலதனச் சந்தை ஆகும்.
- உற்பத்தி நோக்கில் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு தேவைப்படும் நிதியினை திரட்டும் இடமாக மூலதன சந்தை இருக்கிறது.
- மூலதன சந்தையில் பயன்படுத்தப்படும் நிதிக் கருவிகள் கடன் பத்திரங்களும் சம பங்குகளும் ஆகும்.
- இச்சந்தையில் தனி முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், நிதி கழகங்கள், வங்கிகள்.
- அரசு, பங்கு சந்தைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக உள்ளனர்.
- இவர்களை கடனளிப்பவர்கள், கடன் பெறுபவர்கள், மற்றும் வசதி செய்யும் நிறுவனங்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம்
பண மதிப்பு நீக்கம்
- பண மதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டபூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பினை செல்லாது என அறிவிக்கும் செயலாகும்.
- அந்த பணம் பண சுழற்சியிலிருந்து நீக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு வடிவிலான பணம் இடம்பெறும்.
- 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் நாள் ரூ 500 மற்றும் ரூ 1000 மதிப்பிலான காகிதப்பணம். மதிப்பு நீக்கப்பட்டது.
- 2023 மே மாதம் ரூபாய் 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் RBI யால் திரும்படுபறப்படும். என அறிவிக்கப்பட்டது.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள்:
1. கருப்பு பணத்தினை ஒழிப்பது
2. லஞ்சத்தை தடுப்பது
3. தீவிரவாதத்திற்கு பணம் செல்வதை தடுப்பது
4.கள்ளப் பணத்தினை தடுப்பது
பணவியல் கொள்கை (Monetory Policy)
- பண அளிப்பு மற்றும் வட்டிவிகிதத்தை மேலாண்மை செய்யும் நோக்கோடு உருவாக்கப்படும் பேரினப் பொருளியல் கொள்கை ஆகும்.
பேரினப் பொருளியல் கொள்கைகள்:
1. பணவீக்கம்
2.நுகர்ச்சி
3. வளர்ச்சி
4. நீர்மைத்தன்மை
- 2-ம் உலகப்போருக்கு பிறகு பணவியல் கொள்கை முக்கியத்துவம் பெற்றது.
- 1976-ல் நோபல் பரிசு பெற்ற மிலடன் ஃபிரைட் மேனால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பணவியல் கொள்கையாகும்.
- இவர் 1929, 1930 களில் நிலவிய உலக பெருமந்தத்தி கான காரணம் அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் சிஸ்டத்தின் பணவியல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிகள் தான் காரணம் என்பதனை தனது நூலான “அமெரிக்க ஐக்கிய ” 1867-1960 – (Monetory History of the United States 1867-1960) என்ற நூலில் மிக தைரியமாக தெரிவித்திருந்தார்.
விரிவாக்க பணக்கொள்கை (Expansionary Monetary Policy)
- இது ஒரு மலிவுப் பணக்கொள்கையாகும்
- நடப்பு குறுகியகால வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதத்தையும், வழக்கத்தை விட வேகமான பனை அளிப்பையும் ஏற்படுத்துவது.
- வேலை வாய்ப்பின்மைக்கு எதிராக எடுக்கப்படும்.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியால் கணக்கிடப்படும் குறுகிய கால வளர்ச்சியை தூண்டும்.
சுருக்கப் பணக்கொள்கை (Contractionary Monetory Policy)
- அருமைப் பணக்கொள்கை எனப்படுகிறது.
- குறுகியகால வட்டிவிகிதம் நடப்பு வட்டிவிகிதத்தை விட அதிகப்படுத்துவது. பண அளிப்பினை குறைப்பது அல்லது கருக்குவது ஆகும்.
- குறுகியகால பொருளாதார வளர்ச்சியை குறைந்து பணவீக்கத்தை குறைப்பது ஆகும்.
பணக்கொள்கையின் இரண்டு நிலைகள்
பண வீக்கம்
- கடன் பெறுதல் எளிது.
iI. நுகர்வோர் அதிகம் நுகர்வர்
iii. வியாபாரம் அதிகமாகும்.
iv. அதிக மக்கள் வேலை பெறுவார்கள்
v. அதிக மக்கள் செலவும் செய்வார்கள்.
ii. மந்தநிலை
- கடன் பெறுதல் கடினம்.
iI. நுகர்வோர் குறைவாக நுகர்வர்
iii. வியாபார விரிவாக்கம் தள்ளிப்போகும்
iv. வேலையின்மை அதிகரிக்கும்
v. உற்பத்தி குறையும்.
பணவியல் கொள்கையின் நோக்கங்கள்:
- பணத்தின் நடுநிலைத்தன்மை
- பரிவர்த்தனை விகிதத்தில் நிலைத்தன்மை
- விலையை நிலைப்படுத்துதல்
- முழு வேலைவாய்ப்பு
- பொருளாதார வளர்ச்சி
- செலுத்து சமநிலையில் சமநிலையை பேணுதல்