- நுகர்வு என்பது குறிப்பிட்ட பொருளை வாங்கி முழுவதுமாக பயன்படுத்துதல்
- சந்தை (அ) அங்காடி என்பது பொருட்கள் வாங்குவதும் விற்பதும் நடைபெறும் இடம்.
- நுகர்வோர் பொருட்கள்:
அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காயிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- பொருளியலின் அடிப்படை காரணிகள் 4 வகைப்படும்.
1. உற்பத்தி
2. நுகர்ச்சி
3. பகிர்வு
4. பகிர்மானம்
- சேமிப்பு
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்தது போக, எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
தொழில்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. முதல்நிலைத் தொழில்கள்:
- உணவுத் தேவைக்கும். தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்வது முதல்நிலைத் தொழில்கள் எனப்படும்.
(எ.கா) வேளாண்மை, கால்நடைகள் வளர்த்தல், மீன் பிடித்தல், கனிமங்கள்.
தாதுபொருட்கள் போன்ற மூலப்பொருள்கள் சேகரித்தல், மரம் வெட்டுதல்.
2. இரண்டாம் நிலைத் தொழில்கள்:
- முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து, இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில்
உற்பத்தி செய்தல் இரண்டாம்நிலை தொழில்கள் என்றும் தொழில்துறை என்றும் அழைக்கப்படுகிறது.
மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்
i. வேளாண் அடிப்படை தொழிற்சாலைகள்
பருத்தி, சர்க்கரை, உணவு பதப்படுத்துதல்
i. காடு சார்ந்த தொழிற்சாலைகள்
காகிதத்தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப் பொருட்கள்.
ii. கனிமத் தொழிற்சாலைகள்
சிமெண்ட், இரும்பு, அலுமினியம்
iv. கடல்சார் தொழிற்சாலைகள்
நாடு கடல் உணவுகளை பதப்படுத்துதல்
3. மூன்றாம் நிலைத் தொழில்கள்:
- முதல் இரண்டு நிலைகளில் குறிப்பாக தொழில் துறையில், பொருட்களை உற்பத்தி குறியாக தொழில்
- செய்வதற்கும். உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குகொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால், இவை சேவைத்துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது.
உதாரணம்:
போக்குவரத்து – சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள்
தொலைதொடர்பு – அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில் நுட்பம்.
வர்த்தகம் – பொருள்களை கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.
வங்கி – பணப்பரிமாற்றம், வங்கிச் சேவைகள்
உற்பத்தி
- உற்பத்தி என்பது மூலப்பொருட்களை மாற்றி அமைத்து நம் பயன்பாட்டிற்கேற்றவாறு முழுமையாக்கும் ஒரு செயல்.
- நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும் மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றினைத்து ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தி ஆகும்.
- பொருளாதாரத்தில் உற்பத்தி என்னும் சொல் மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதை குறிக்கும்.
- பயன்பாட்டை உருவாக்குவதே உற்பத்தி ஆகும்.
பயன்பாடு
- பொதுவாகப் பயன்பாடு என்பது பயன்படுத்தலைக் குறிக்கும்.
- பயன்பாடு என்பது நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.
- பொருளியலில் மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் ஆற்றலே பயன்பாடு எனப்படும்.
- ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில், தனிப்பட்ட நுகர்வோருக்கு பண்டங்கள் மற்றும் பணிகளின் மூலம் கிடைப்பதே பயன்பாடாகும்.
- மனிதனின் விருப்பத்தை நிறைவு செய்யும் பண்டம் மட்டுமே பயன்பாடு கொண்டுள்ளது எனபொருளியலில் கருதப்படுகிறது.
பயன்பாட்டின் இயல்புகள்
1. பயன்பாடு உளவியல் சார்ந்தது.
இது நுகர்வோரின் மனநிலையை சார்ந்தது.
(உ.ம்.) சைவ உணவு உட்கொள்பவருக்குஇறைச்சி பயன்பாட்டைக் கொடுக்காது.
2.பயன்பாடும். உபயோகமும் ஒன்றானவை அல்ல:
(உ.ம்.) புகைப்பழக்கம்
உள்ளவருக்கு சிகரெட்டிலிருந்து பயன்பாடு கிடைத்தாலும். அவரின் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
3. பயன்பாடும் மகிழ்ச்சியும் ஒன்றானவைஅல்ல:
(உ.ம்.) நோயுற்ற ஒருவர் மருந்து எடுத்துக் கொள்ளும் போது பயன்பாடு கிடைத்தாலும், நிச்சயமாக அது மனமகிழ்வை தராது எனலாம்.
4. பயன்பாடு தனித்தும், சார்ந்தும் இருக்கும்:
ஒரு தனி நபர் ஒரே விதமான பண்டத்திலிருந்து பெறும் பயன்பாடானது இடம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்.
ஓர் உணவு தரும் பயன்பாடு அந்த உணவை அருந்தும் சூழலைப் பொறுத்தும் அமையலாம்.
5. பயன்பாடானது மனித விருப்பத்தின் தீவிரத்தைச் சார்ந்தது
ஒரு நுகர்வோர்குறைந்துசெல் பயன்பாட்டை எதிர்கொள்வார்.
6. பயன்பாடு ஒரு உளவியல் கருத்தாகும்:
அதனை துல்லியமாக அளவிடவோ எண்ணிக்கையிடவோ முடியாது.
7. பயன்பாடு நீதிநெறி, ஒழுக்கநெறி முக்கியத்துவம் கொண்டதல்ல:
(உ.ம்)கத்தியை சமையல்காரர் காய்கறிகளை வெட்டப் பயன்படுத்துகிறார். கொலைகாரன் தனது எதிரியை தாக்கப் பயன்படுத்துகிறான்.
பயன்பாட்டின் வகைகள்:
1. வடிவப்பயன்பாடு:
ஒரு விளைபொருளின் வடிவம் மாற்றப்படும் போது அதன் பயன்பாடு மிகுதியாகிறது.
எ.கா பருத்தி ஆடை
2. இடப்பயன்பாடு:
ஒரு விளைபொருள் ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் போது அதன் பயன்பாடு மிகுதியகிறது.
3. காலப் பயன்பாடு:
ஒரு விளை பொருளை எதிர்காலத் தேவைக்காக சேமித்து, சேமிப்பு கிடங்கில் வைக்கும் போது அதன் பயன்பாடு மிகுகிறது.
எ.கா நெல், கோதுமை சேமித்து வைப்பதால் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன.
4. சேவைப் பயன்பாடு:
ஒரு நுகர்வோர் தேவையான நேரத்தில், தேவைப்படுகிற பணியினைப் பெறும்போது சேவைப் பயன்பாட்டைப் பெறுகிறார்.
(உம்.)சேவைப் பணியை வழக்குத் தொடுத்தவர் வழக்குரைஞரிடமும், நோயாளி மருத்துவரிடமும் பெறுகிறார்கள்.
5. உடைமைப் பயன்பாடு:
ஒரு மாணவன் புத்தக விற்பனையாளரிடமிருந்து புத்தகம் அல்லது அகராதியை வாங்கும் போது மட்டுமே உடைமைப் பயன்பாட்டை அடைகிறான்.
6. அறிவுப் பயன்பாடு:
- அறிவுப் பயன்பாடு, என்பது ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும்.
- விளம்பரம் மூலமாக ஒரு பொருளைப் பற்றிய தகவல் அறியப்படுகிறது. அந்த தகவல் சீர்படுத்துவதாகவும் அமையலாம். சீர்கெடுப்பதாகவும் அமையலாம். அது சீர்படுத்துவதாக அமைந்தால் அதிலிருந்து பயன்பாடு பெறப்படுகிறது என்று கொள்ளலாம்.
பயன்பாட்டை அளவிடுதல்
- மனிதனின் விருப்பம், நுகர்வின் போது நிறைவடைகிறது.
- நுகர்வோர் பெறும் பயன்பாடு யுடில்ஸ் (utils) என்று அளவிடப்படுகிறது. யுடில்ஸ் என்பது பயன்பாட்டின் ஓர் அளவீடாகும்.
- ஒரு நபர் ஓர் அலகு பொருளில் இருந்து பெறும் பயன்பாட்டிற்கு சமமாக விலை தருகிறார். இதனால் தான் பயன்பாட்டை அளக்கும் அளவு கோலாக பணத்தை மறைமுகமாக பயன்படுத்தலாம் என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
உற்பத்தியின் வகைகள்
1. முதன்மை நிலை உற்பத்தி – சுரங்கம், காடுகள், வேளாண்மை
2. இரண்டாம் நிலை உற்பத்தி – பொறியியல் & கட்டுமானத் துறை, பருத்தி தொழிற்சாலை
3. மூன்றாம் நிலை உற்பத்தி-
பாதுகாப்புத் துறை, வங்கித்துறை. கல்வித்துறை
(எ.கா)
1. பருத்தி – முதன்மை துறை, பருத்தித் தொழில்
2-ம் நிலை உற்பத்தி (ஆடை உற்பத்தி)
2. இருப்புத்தாது முதன்மை துறை. இரும்பு தொழில் 2 ம் நிலை தொழில் (பொருள் தயாரிப்பு)
3. கோதுமை மாவு முதன்மை துறை. ரொட்டித் தொழிற்சாலை – 2ம் நிலை (உணவு உற்பத்தி)
உற்பத்திக்கான காரணிகள்:
- மனிதனின் செயல்பாடுகள் பொருளை உற்பத்தி செய்தல், நுகர்தல் என்னும் இரு கூறுகளில் உள்ளடங்கியுள்ளது.
- உற்பத்தியின் போது பொருள்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றம் செய்யப்படுகின்றன.
- நிலம். உழைப்பு, மூலதனம், தொழில் முனைவோர் (தொழிலமைப்பு)
- முதல்நிலை உற்பத்தி காரணிகள் (அ) உண்மை காரணிகள் நிலம், உழைப்பு
- பெறப்பட்ட உற்பத்தி காரணிகள் – மூலதனம். தொழிலமைப்பு
நிலம்

- இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாக கொடுத்திருக்கும் அனைத்தையும் குறிக்கும்.
- மனிதனால் உருவாக்கப்படாத அனைத்தும் நிலம் ஆகும்.
எ.கா
நிலப்பரப்பு, நீர், காற்று, கனிமவளங்கள். கடல்கள், மலைகள்
- குறிப்பிட்ட நிலப்பகுதி அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் வளங்களைப் பொருத்து நிலத்தின் வடிவம் மாற்றமடைகிறது.
எ.கா:
வேளாண்மை செய்யும் போது விளைநிலம்
வீடுமனை விற்பனை வீட்டு நிலம்
நிலத்தின் சிறப்பியல்புகள்:
1. நிலம் இயற்கையின் கொடை
2. நிலத்தின் அளிப்பு நிலையானது. அதனை அளவை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது
3. நிலம் அழிவில்லாதது (நிலத்தின் அளிப்பு என்றும் மாறாததாக அழிவற்றதாக உள்ளது)
4. நிலம் ஒரு முதன்மை உற்பத்தி காரணி
5. நிலம் இடம்பெயரக் கூடியதன்று
6. நிலம் ஆற்றல் வாய்ந்தது.
7. நிலம் செழிப்பு தன்மையில் மாறுபடும்.
உழைப்பு:
- உற்பத்தியில் மனித உழைப்பு ஒர் உள்ளீடாகும்
- வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன்படுத்தி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு என “ஆல்பிரட் மார்ஷல்” கூறியுள்ளார்.
உழைப்பின் சிறப்பியல்புகள்:
- அழியக்கூடிய ஒன்று
- உழைப்பை சேமித்து வைக்க இயலாது
- வேலையில்லாத தொழிலாளியின் உழைப்பு, அவர் வேலை செய்யாத நாளில் இழக்கப்படுகிறது.
- உழைப்பைத் திரட்டவோ அடுத்த நாள் தள்ளிப்போடவோ இயலாது. அதனை ஒருமுறை இழந்தால் மீண்டும் திரும்ப பெற இயலாது.
- உற்பத்தியில் உழைப்பு என்பது ஓர் செயற்படு காரணியாகும். நிலமோமூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலாது.
- உழைப்பு ஒரே சீரானதல்ல, திறமையும் பயிற்சியும் நபருக்கு நபர் மாறுபடுகின்றன.
- உழைப்பை உழைப்பாளரிடமிருந்து பிரிக்க இயலாது.
- உழைப்பு இடம்பெயர கூடியது (ஊதியம் குறைவு முதல் ஊதியம் அதிகம்)
- தனியாக உழைக்கும் உழைப்பாளரிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு.
எ.கா. உழைப்பு:
உடல் உழைப்பு – சமையல்காரர்
மன உழைப்பு – ஆசிரியர்
வேலைபகுப்பு முறை:
- வேலை பகுப்பு முறையை ஆடம்ஸ்மித் தனது “நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும்” என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
- உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து, அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவிடம் ஒப்படைத்தலே வேலை பகுப்பு முறை. S
வேலைபகுப்பு:முறையின் நன்மைகள்:
- உழைப்பாளி ஒருவர், ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் அந்த வேலையில் திறமையுடையவராக ஆகிறார்.
- இம்முறை வகுக்கிறது. நவீன இயந்திரங்களை உற்பத்தியில் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு வழி
தீமைகள்:
- தொழிலாளி ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால் சுவையற்ற. களிப்பற்ற தன்மையை அடைகிறார். இது மனிதத் தன்மையை அழிக்கிறது.
- ஒரு பகுதி பணியினை மட்டும் ஒரு தொழிலாளி மேற்கொள்வதால், அவன் குறுகிய தேர்ச்சியை மட்டுமே பெறுகிறான். இதனால் வேலைவாய்பின்மை பெருகும் நிலை உருவாகிறது.
மூலதனம்:
- மூலதனம் என்பது செல்வத்தைக் குறிக்கும்.
- பொருளியலில் மூலதனம் என்பது செல்வத்தை மேலும் உற்பத்தி செய்திட மனித முயற்சிகளால் உருவாக்கப்பட்ட செல்வம் ஆகும்.
எ.கா.-இயந்திரங்கள், கருவிகள்.
- இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக்கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம்” – மார்ஷல்
- மூலதனம் என்பது இரண்டாம் நிலை உற்பத்தி காரணி ஆகும்.
- உற்பத்தியின் ஒரு பகுதி சேமிக்கப்படுகிறது. இந்த சேமிப்பே மூலதனம் எகா மாம்பழம் விதை
- மூலதனம் ஒரு இருப்பு
அனைத்து மூலதனமும் செல்வமாகும். அனைத்து செல்வங்களும் மூலதனமாகாது.
எ.கா. டிராக்டர் மூலதன சொத்து உற்பத்தி மூலதனம்.
மூலதனத்தின் சிறப்பியல்புகள்
1. மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது.
2. மனிதனுக்கு மனிதன். இடத்திற்கு இடம் பெயரக்கூடியது.
3. செயலற்ற உற்பத்திக் காரணியாகும்.
4. மூலதனத்தின் அளிப்பு நெகிழும் தன்மையுடையது.
5. மூலதனத்தின் தேவை என்பது தருவிக்கப்பட்ட தேவையாகும்.
6. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.
மூலதனத்தின் வகைகள்-
1. பருமப்பொருள் மூலதனம்: மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள். இயந்திரங்கள்
2.பண மூலதனம்: பண வடிவில் அல்லது பண மாற்றும் பத்திரங்களாக உள்ள முதலீடுகள்.
3.மனித மூலதனம்: கல்வி பயிற்சி மற்றும் உடல்நலத்திற்காக செய்யப்படும் முதலீடுகள்.
4.நிதி மூலதனம்: பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்ய, ஒரு நிறுவனத்திற்கு தேவையான செல்வம் – இது பணத்தின் மூலம் மதிப்பிடப்படுகிறது.
தொழில் அமைப்பு:
- உற்பத்தி என்பது நிலம் உழைப்பு மற்றும் மூலதனத்தை பொறுத்தது. அக்காரணியை சரியான அளவில் இணைத்து உற்பத்தி முறையை ஒருங்கிணைத்து இடர்பாடுகளை ஏற்க ஒரு காரணி இருக்க வேண்டும். அக்காரணி தொழிலமைப்பு எனப்படுகிறது.
தொழில் முனைவோர்
- ஒரு தொழிலை ஒருங்கிணைத்து ஏற்று நடத்துபவர் ‘தொழில் அமைப்பாளர் (அ) தொழில் முனைவோர்’ஆவார்.
- தொழில் முனைவோர் ஒரு முக்கியமான உற்பத்தி காரணி ஆவார்.
- தொழிலமைப்பில் பண்டங்கள், பணிகளின் இயக்கம் முதன்மை, இரண்டாம் மற்றும் சார்புத்துறை மூலமாக செயல்படுவது உற்பத்தி சங்கிலி எனப்படும்.
- தொழில் முனைவோர் என்பவர் பல்வேறு உற்பத்தி காரணிகளான நிலம். உழைப்பு மூலதனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயற்படுத்தி உற்பத்தியில் லாபம் பெற முயல்பவர்.
தொழில் முனைவோர் பணிகள்:
- துவக்கப் பணி
ii. புத்தாக்கப் பணி
iii.ஒருங்கிணைத்தல்
V.இடம்பெயர்தல்:
- கிராமம் அல்லது நகரம் என அனைத்து விதமான குடியிருப்பு பகுதிகளிலும் பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது. இது இடம்பெயர்தல் என அழைக்கப்படுகிறது.
இடம்பெயர்வின் அடிப்படை
1. பிறப்பின் அடிப்படையில்:
கணக்கெடுப்பின் போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டிருந்தால் வாழ்நாள் இடம்பெயர்வு என அழைக்கப்படுகிறது.
- வாழிடம் அடிப்படையில்:
கணக்கெடுப்பின் போது வேறுபட்டிருந்தால் அழைக்கப்படுகிறது. இருக்கும் இடமும். கடைசியாக வாழ்ந்த இடமும் வாழிட அடிப்படையிலான
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இடம்பெயர்தலின் பரவல்:
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 121 கோடி மக்களில் 45 கோடி மக்கள் வாழ்நாள் அடிப்படையில் இடம்பெயர்ந்தவராகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 7.2 கோடி மக்களில் 3.13 கோடி மக்கள் இடம்பெயர்ந்தவர் என கணக்கிடப்பட்டுள்ளது.
- இந்தியாவின் இடம்பெயர்வு -37%
தமிழ்நாடு இடம்பெயர்வின் உச்சமாக 43%
- தமிழகத்தில் இடம்பெயர்தலின் பரவல் நகர்புங்களில் இருப்பதைவிட கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுகிறது.
- இடம்பெயர்வு பெரும்பாலும் பெண்களை விட ஆண்களோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.
ஆனால் அதிக இடம்பெயர்வு ஆண்களை விட பெண்களில் மட்டுமே காணப்படுகிறது.
- 2011 ம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களில் 53% பெண்கள் 23%ஆண்கள் இடம்பெயர்ந்தவர்கள்.
- தமிழ்நாட்டில் ஆண்கள் 35% பெண்கள் 52%
- பெண்கள் இடம்பெயர்விற்கு காரணம் திருமணம் (70% இந்தியா 57% தமிழ்நாடு ஆண்கள் இடம்பெயர்விற்குகாரணம் – வேலைவாய்ப்பு 28% இந்தியா, 20% தமிழ்நாடு
- 2011 கணக்கெடுப்பின் படி ஐந்து பேரில் இருவர் இடம்பெயர்ந்தவராக உள்ளனர் (தமிழ்நாட்டில்)
- தமிழ்நாட்டில் மொத்த இடம்பெயர்வாளர்களில் 65% பேர் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும். 35% பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம் பெயர்கின்றனர்.
- சென்னை மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கிறது.
- வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் சிங்கப்பூர் முன்னிலையில் உள்ளது.
- இந்தியா -இடம்பெயர்தலுக்கான காரணங்கள்
1. வேலை
2. தொழில்
3. கல்வி
4. திருமணம்
5. பிறப்பிற்கு பிறகு இடம்பெயர்தல்
6. குடும்பத்துடன் இடம்பெயர்தல்
- உலகிலேயே மெக்ஸிகோ, அமெரிக்க ஐக்கிய நாடு இடையேயான இடம்பெயர்வு பாதையே 2010 ம் ஆண்டின் மிகப்பெரிய இடம்பெயர்வு பாதையாகும்.
- உலகிலேயே நீண்ட தூரம் இடம்பெயரும் பறவை ஆர்டிக் டெர்ன் (Artic tern)
இடம்பெயர்வு கொள்கைகள்:
- கிராமப்புறங்களில் ஏழ்மையினால் இடம்பெயர்தல் நடக்கின்றன. எனவே ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மூலமாக இடம்பெயர்தலை தடுக்கலாம்.
- இடம் பெயர்தலை திசைமாற்றி அமைத்திடும் கொள்கை முடிவுகள் எடுத்தல்.
- 2015 ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வி அறிவு அற்றவர்கள் 7% பேர்.
மேம்பாடு:
- ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பதே பொருளாதார மேம்பாடு என்று அறியப்படுகிறது.
- மேம்பாடு என்பது
1.முன்பு இருந்ததை விட மேம்படுதல்
2.தேவையான வழிகளில் வளர்ச்சி அடைதல்
3.முன்னோக்கி செல்லுதல்
4. முன்பு செய்த தவறை செய்யாதிருத்தல்
5. முன்னெடுத்தல்
6. தன்னுள் வளர்ச்சி
7. முன்னேற்றம்.
- பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நிலையான நாட்டின் வளர்ச்சியையும் குறிக்கிறது.
குறியீடுகள்:
1. நிகர நாட்டு உற்பத்தி (NNP)
2.தனி நபர் வருமானம் (PCI)
3.வாங்கும் திறன் சமநிலை (PPP)
4.மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI)
- இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும்
தலைமையிடம் டெல்லி
- தென் மாநிலங்களில் கல்வியறிவில் தமிழ்நாடு இரண்டாமிடம் (50.9%)
தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடம் 44.3%
வரி (Tax)

- வரி என்பது “ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அரசிடமிருந்து எந்தவொரு நன்மையும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயம் செலுத்த கூடியதாகும்”-அனடோல் முராட்
- வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகை
- அரசிடம் இருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாக செலுத்த வேண்டியதே வரி எனப்படும் பேராசிரியர் செலிக்மேன்.
- “டாக்ஸோ” என்ற லத்தீன் சொல்லின் பொருள் விகிதம் அல்லது வரி என பொருள்படும்.
- நாகரிகத்தின் கட்டட தொகுதி வரி ஆகும்.
- சுமேரியா- வரி ஒழுங்கமைக்கப்பட்ட முதல் சமுகம்.
- பண்டைய கிரேக்க மற்றும் ரோமப் பேரரசின் அடிப்படை-வரி
- தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வியாபார லாபத்தின் மீது அரசாங்கம் விதிக்கும்.
வரியின் வகைகள்:
1. நேர்முக வரி
2. மறைமுக வரி
1. நேர்முக வரி
நேர்முக வரி என்பது நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்பட்டு அரசுக்கு
நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே வரி செலுத்துவதாகும். நேர்முக வரியில் வரி செலுத்துபவரே வரிச்சுமையைச் சுமக்க வேண்டும்.
மக்கள் நிறுவனங்களின் வருமானம் மற்றும் சொத்தின் மீது அரசு தீர்வை விதிக்கிறது.
வரி வளர்வீத தன்மை கொண்டது
ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்படும்.
எ.கா:
பணக்காரர்களிடமிருந்து அதிகமான வரியும். ஏழை மக்களிடமிருந்து குறைவான வரியும் வசூலிக்கப்படும்.
நேர்முக வரியின் வகைகள்:
1. வருமான வரி – வருமானம் உயர உயர வரி சதவீதம் உயரும்
2. எஸ்டேட் வரி (மரண வரி) – இறந்தவரின் சொத்தின் மீது விதிப்பது.
3. பரிசு (அ) அன்பளிப்பு வரி – ரூபாய் 50,000 க்கும் அதிகமாகவுள்ள பொருளை அன்பளிப்பாக பெறும் பொழுது அன்பளிப்பு பெறுபவர் வரி செலுத்த வேண்டும்.
4. சொத்து வரி – ஒருவரின் சொத்தின் மீது விதிப்பது.
நேர்முக வரியின் நன்மைகள்:
1. சமத்துவம்
2. நிச்சயதன்மை
3. நெகிழும் தன்மை
4. சிக்கனம் (வசூலிப்பதற்கான செலவு குறைவு)
நேர்முக வரியின் தீமைகள்
1. பிரபல மின்மை
2. உற்பத்திறன் பாதிப்பு (ஆர்வமின்மை)
3. வசதி குறைவு (கணக்கு பராமரித்தல், வரி தாக்கல் செய்வதில்)
4. வரி எய்த்தல்.
2. மறைமுக வரி
- நுகர்வு செலவு மற்றும் சிறப்பு உரிமை மீது மத்திய மற்றும் மாநில அரசு விதிப்பது.
- ஒருவர் மீது வரி விதிக்கப்பட்டு மற்றொருவர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வரி செலுத்துவதாகும்.
- தனிநபர் மீது விதிக்கப்படாததால் இது மறைமுக வரி எனப்படும்.
- பொருட்களையோ அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீது விதிகப்படுகின்ற வரி
- இது அரசுக்கு மறைமுகமாக செலுத்தப்படுகிறது.
- இந்த வரிச்சுமை எளிதாக மற்றொரு நபர் மீது மாற்ற முடியும்.
- ஏழை அல்லது பணக்காரர் என யாராக இருந்தாலும் அந்நபர்கள் மீது சமமாக சுமத்தப்படும். S
மறைமுகவரியின் வகைகள்:
1. உற்பத்தி வரி
உற்பத்தியாளர் வரியை செலுத்தினாலும் பளுவை விற்பனையாளரிடம் மாற்றி விடுவார்
2. விற்பனை வரி
நகரும் பொருட்களை வாங்கவோ விற்கவோ விதிக்கப்படுவது (எ.கா) VAT
3. சுங்கத்தீர்வை
வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி தீர்வை செலுத்தப்படும்.
4. கேளிக்கை வரி
திரையரங்கு உரிமையாளர் மீது விதிப்பது.
5. சேவை வரி
தொலைபேசி, காப்பீடு, உணவு விடுதி போன்ற
சேவைகளுக்காக விதிக்கப்படுவது
நன்மைகள்:
1. பரந்து காணப்படுதல் (அனைவருக்கும்)
2. சமத்துவம்
3. சிக்கனத்தன்மை
4. உடலுக்கு தீங்கான பொருட்களின் நுகர்வை குறைக்கிறது.
5. வசதியானது.
தீமைகள்:
1. வசூலிக்கும் செலவு அதிகம்
2. நெகிழ்ச்சியற்ற தன்மை
3. தேய்வீதம்
4. உறுதியின்மை
5. குடிமை உணர்வின்மை
ஆயதீர்வை வரி
மொத்த விற்பனையாளரிடமிருந்தும் சில்லறை விற்பனையாளரிடமிருந்தும் பொருள்களை
வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய கலால் வரி
இது மத்திய அரசால் சுமத்தப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி (GST)

- இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கும் வரி ஆகும்.
- விரிவான மறைமுக வரியாக உற்பத்தி விற்பனை மற்றம் நுகர்வு மீது விதிக்க இது முன்மொழியப்பட்டது.
- இவ்வரியை மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசுகள் விதிக்கும்
- அனைத்து மறைமுக வரிக்கு பதிலாக கொண்டு வரப்பட்டது.
- GST சட்டம்-2017 மார்ச் 29 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
GST நடைமுறை -2017 ஜூலை 1
GST தினம்-ஜூலை 1
GST வரியை 13 வது நிதிக்குழுவின் தலைவர் விஜய் எல் கேல்கர் பரிந்துரைத்தார்.
GST யை வடிவமைத்தவர்- அபிம் தாஸ் குப்தா.
GST சட்டதிருத்தம்-101
GST யை பற்றி குறிப்பிடும் சரத்து -279A
- பண்டங்கள் மற்றும் பணிகள் அளிப்பின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியாகும்.
- நாடு ழுழுவதற்குமான ஒரே மறைமுக வரியாக GST உள்ளது.
- இது உற்பத்தி மற்றும் பண்டங்கள் மீதான அடுக்குவரி பாதக விளைவை நீக்கும்.
GST -யின் உள்ளடக்கங்கள்:
1. CGST- Central GST (மத்திய சரக்கு மற்றும் சேவை வரி)
- மாநிலத்திற்குள்ளே வசூலிக்கப்படுவதாகும். நடைபெறுகிற விற்பனையில்
2. SGST-State GST
- மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வருவிக்கப்படுவதாகும்.
3. IGST
மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும்.
விற்பனை வரியின் இயல்பு VAT மற்றும் GST
- GST வரியானது சரக்கு மற்றும் சேவை விற்பனையில் உள்ள அடித்தள விளைவை நீக்கியது. இது வரிக்கு வரி என்பதை நீக்கியதால் பொருட்களுக்கான செலவு குறைந்தது
- VAT எனப்படுவது அடித்தள விளைவில்லாத பல முனை வரியாகும்.
GST என்பது அடித்தள விளைவில்லாத ஒரு முனை வரியாகும்.
GST – யின் நன்மைகள்:
1. வரி மீதான வரி இம்முறையில் நீக்கப்படுவதால் பொருட்களுக்கான செலவு குறைகிறது.
இது நேரடியாக பொருட்களின் செலவில் பிரதிபலிக்கிறது.
2. GST தொழில்நுட்பரீதியில் அமைந்ததாகும்.
3. பதிவு செய்தல் வரித்தாக்கல் செய்தல், போன்றவை இணையத்தில் செய்யப்படுகிறது.
4. இதனால் அனைத்து செயல்பாடுகளும் விரைவாக எளிதில் முடிகிறது.
வரிவிதிப்பு வகைகள்:
1. விகிதாச்சார வரி
- வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது.
2. வளர்வீத வரி
- ஒருவரின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு ஏற்ப வரி விகிதமும் அதிகரிக்கும்.
3. தேய்வு வீத வரி
- அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கும். குறைவான வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக வரி விதிக்கப்படும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவர்.