- ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது.
- GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதாவது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பைக் குறிக்கும்.
- ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் மட்டும் குறிப்பிடப்படுவதின்றி அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் அல்லது மக்களின் நலவாழ்வையும் உள்ளடக்கியதாகும்.
நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தின் அளவீடுகள்:
1. மனித வள மேம்பாட்டுக் குறியீடு உடல் மற்றும் பணம் சார்ந்த கோட்பாட்டை விவரிக்கிறது (HDI – Human Development Index) (அறிமுகம் -மஹப் உல் ஹாஸன், அமர்த்தியா குமார் சென்)
2 வாழ்க்கைத்தர குறியீடு-உடல் சார்ந்த கோட்பாட்டை விவரிக்கிறது. (PQLI – Physical Quality of life Index) (-14 Κοπίο)
3. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு(GNHI Gross National Happy Index) (அறிமுகம்-ஜிக்மே சிங்யே-வாங்சுக்)
மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு(GNHI – Gross National Happy Index)
- மொத்த நாட்டு மகிழ்ச்சி” என்ற தொடர் 1972 ம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்யே- வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- இது நிலைத்த முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார மேம்பாடு, சிறந்த நிர்வாகம்.
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்:
1.இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்
- தனியார் துறையும் பொதுதுறையும் இணைந்து சீரிய முறையில் செயல்படுவது. மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன.
- அதே சமயம் பொருளாதார, தாராள மயமாக்கலின் விளைவாக தனியார் துறையின் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளன.
2. வேளாண்மை முக்கி பங்கு வகிக்கிறது
- இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
- 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது.
- பசுமைபுரட்சி பசுமைமாறா புரட்சி மற்றும் உயிரி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் வேளாண்மையில் தன்னிறைவு பெற்றுள்ளது.
- பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்கள். தாவர எண்ணெய், புகையிலை, விலங்குகளின் தோல் போன்ற இந்திய வேளாண் பொருட்கள்பன்னாட்டு வாணிபத்தின் மூலம் நமது பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றன.
3. வளர்ந்து வரும் சந்தை
- அந்நிய நிறுவன முதலீட்டாளர்(குறுகிய கால முதலிடு) (Fil – Foreign Institutional Investors) வழியாக முதலீடு அதிகரித்து நம்நாடு வேகமாக வளர்ந்து வருகிறது.
- இந்தியா குறைந்த முதலீட்டில், குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாத்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது.
4.வளர்ந்து வரும் பொருளாதாரம்
- GDP-யில் 7 வது இடத்தையும்.
வாங்கும் சக்தியில்(PPP-Purchasing Power Parity) 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது.
- இந்த வளர்ச்சியின் விளைவாக றே நாடுகளில் இடம் பெற்றுள்ளது.
5. வேகமான வளரும் பொருளாதாரம்
- 2016 – 2017-18 குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.15 பெற்றதன் வாயிலாக உலகில் வேகமாக வளர்ந்து வருகிறது.
6. வேகமாக வளரும் பணிகள் துறை
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும்.
- தொழில்நுட்பம், BPO போன்ற தொழில்நுட்ப சேவைகள் பெற்றுள்ளது. ES பேரளவு வளர்ச்சி
7. பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி
- மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதால் உள்நாட்டு நுகர்வு பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது.
8. நகரப்பகுதிகளின் விரைவான வளர்ச்சி
- மேம்பட்ட போக்குவரத்து மற்றும் தொடர்புகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நகரமயமாதலை மேலும் விரைவுபடுத்துகின்றன.
9. நிலையான பேரளவு பொருளாதாரம்
- நடப்பாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை இந்தியப் பொருளாதாரத்தை நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பொருளாதாரத்திற்கான சொர்க்கம்” என்று குறிப்பிடுகிறது. பேரியல்
10. மக்கள் தொகை – பகுப்பு
- இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது.
இதன் பொருள் இந்தியா அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் திறமை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது.
இலக்குமுறை (Digtal) பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய
போட்டியாளராகும் கூறியவர் – சுந்தர் பிச்சை. CEO (Google)
இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனம்:
1. அதிக மக்கள் தொகை

- மக்கள்தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கும் 1.7 என்ற வீதத்தில் அதிகரிக்கிறது.
2. ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை
- அதிகஅளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் பணக்காரர்கள் தொடர்ந்து ஏழைகளாகவும் நீடிக்கின்றனர். அதிகரித்தவண்ணம் உள்ளது. பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து FS
3. அத்தியாவசியப் பண்டங்களின் விலை
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தபோதும் அத்தியாவசியப் பண்டங்களின் விலை தொடர்ந்த உயர்கிறது.
- தொடர்விலை ஏற்றத்தால் வாங்கும் சக்தி குறைவதோடு மட்டுமல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாத ஏழை மக்களை பாதிக்கிறது.
4.உள்கட்டமைப்பு பலவீனம்
- மின் ஆற்றல், போக்குவரத்து பண்டங்கள். பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது.
5. வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை
- அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது
- உற்பத்தியில் ஏற்படும் வளர்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே இந்தியப்பொருளாதாரம் ‘வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி” என்ற பண்பைக் கொண்டுள்ளது.
6. பழமையான தொழில்நுட்பம்
- வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பநிலை இன்னும் பழமையானதாகவும் வழக்கொழிந்ததாகவும் உள்ளது.
முன்னேறிய நாடுகளின் இயல்புகள்:
1.உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி
2. உயர்ந்த தனிநபர் வருமானம்
3. உயர்ந்த வாழ்க்கைத் தரம்
4. முழுவேலைவாய்ப்பு
5. தொழில்துறையின் ஆதிக்கம்
6அதிக நுகர்ச்சி நிலை.
7.அதிக நகரமயமாதல்
8. சீரிய பொருளாதார வளர்ச்ச
9. சமுதாய சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக்குறைந்த வறுமை
10.அரசியல் நிலைதன்மை மற்றும் நல்ல ஆட்சி.
11. தொழில் செறிவு
12.உயர் தொழில்நுட்பம்
இந்தியாவில் மக்கள் தொகை போக்குகள்:
- மக்கள்தொகை அளவு
- வளர்ச்சி வீதம்
- பிறப்பு மற்றும் இறப்பு விகிதம்
- மக்கள் தொகை அடர்த்தி
- பாலின விகிதம்
- வாழ்நாள் எதிர்பார்ப்பு
- எழுத்தறிவு விகிதம்
1. மக்கள் தொகை அளவு
- கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
- உலகின் புவிப்பரப்பில் 24% பரப்பளவு மற்றும் உலக வருவாயில் 1.2% வருவாய பெற்றுள்ள இந்தியா உலக மக்கள் தொகையில் 17.5% யைக் தன்னகத்தே கொண்டுள்ளது.
- உலக மக்கள் தொகையில் 6 – ல் ஒருவர் இந்தியர்
- நோய்கள் காரணமாக 1911 – 1921 காலகட்டத்தில் மக்கள்தொகை எதிர்மறையாக குறைந்தது
- 1921- பெரும் பிரிவினை ஆண்டு என அழைக்கப்படுகிறது.
- 1951 மக்கள்தொகை பெருக்க வீதம் 1.33% லிருந்து 1.25% ஆக குறைந்து வந்தது. எனவே சிறு பிளவு ஆண்டு* எனப்படுகிறது.
- 1961 ல் இந்திய மக்கள்தொகை உயர்வீதம் 196% அதாவது 2% ஆகும் ஆகையால் 1961 ம் ஆண்டை “மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு” என்கிறோம்.
- 2001-ம் ஆண்டு மக்கள்தொகை ஒரு பில்லியன் (100 கோடி) அளவை கடந்தது.
+2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இளைஞர்களின் மக்கட்தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது இது மக்கள் தொகை மாறுதலை குறிக்கும்.
2. பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்
- குழந்தைகள் பிறப்பு விகிதம் இது 1000 மக்கள்தொகைக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
- இறப்பு விகிதம்:
இது 1000 மக்கள் தொகைக்கு இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
- மிககுறைந்த பிறப்பு விகிதம் – கேரளா (14.7%)
மிக அதிக அளவு பிறப்பு விகிதம் உத்திரபிரதேசம் (29,5%)
மிக குறைந்த இறப்பு விகிதம் மேற்கு வங்காளம் (6.3%)
மிக அதிக இறப்பு விகிதம் – ஒரிசா (9.2%)
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்:
மத்திய பிரதேசம்(MA)
ராஜஸ்தான்(R)
v. உத்திர பிரதேசம் (U)
- இந்த நான்கு மாநிலங்களும் “BIMARU’ (பிமரு) மாநிலங்கள். அழைக்கப்படுகின்றன.
3. மக்கள் தொகை அடர்த்தி
- மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. நிலம் மற்றும் மனிதன் விகித அளவைக் குறிக்கிறது.
மக்கள் தொகை அடர்த்தி = மொத்த மக்கள் தொகை/அப்பகுதியின் நிலப்பரப்பு
ஆண்டு
மக்கள்தொகை அடர்த்தி
117
1951
2001
325
2011 382
- பீகார் மிகவும் அதிக மக்கள் தொகை அடர்த்தியுடன் 1,102 என உள்ளது.
- ஒரு சதுர கிலோமீட்டருக்கு 17 நபர்கள் என்ற அளவில் அருணாசலப்பிரதேசம் மிகக்குறைவான மக்கள் தொகை அடர்த்தியைப் பெற்றுள்ளது.
4. பாலின விகிதம்
- மக்கள் இது 1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிக்கிறது.
- 2011 மக்கள்தொகை கணக்கீட்டின் படி கேரளா 1000 ஆண்களுக்கு 1084 பெண்களக் கொண்டுள்ளது.
- மிகக்குறைந்த பாலின விகிதம் 877 உடன் ஹரியானா உள்ளது.
5. பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு
- பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அள அளவே வாழ்நாள் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிடப்படுகிறது.
- அதிக வாழ்நாள் காலம் குறைந்த இறப்பு விகிதத்தையும், குறைந்த வாழ்நாள் காலம் அதிக இறப்பு விகிதத்தையும் குறிப்பிடுகின்றது.
- 2011-ன் படி வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் -63.5 ஆண்டுகள்.
6. எழுத்தறிவு விகிதம்
- இது மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை விகிதத்தை குறிப்பிடுகிறது.
- 1951 ல் ஆண்கள் நான்கில் ஒருவர் மற்றும் பெண்கள் பன்னிரெண்டில் ஒருவர் என்ற அளவிலேயே எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை இருந்தது.
சராசரியாக ஆறு பேருக்கு ஒருவர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர் ஆவார்.
- 2011 ல் ஆண்கள் 82% ம், பெண்கள் 65.5% என்ற அளவில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 74.04%
இயற்கை வளங்கள்:
- காடு, நீர்.கனிம வளங்கள் மற்றும் ஆற்றல் சக்திகள் ஆகியன முக்கிய இயற்கை வளங்கள் ஆகும்.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள்: நீண்டகாலங்கள் நிலைத்து இருக்கக் கூடிய மீண்டும் உருவாக்கக்கூடிய வளங்கள்.
எ.கா காடுகள், வன விலங்குகள், காற்று, கடல்வளங்கள், நீர்மின்சக்தி.
புதுப்பிக்க இயலாத வளங்கள்மீண்டும் உருவாக்கமுடியாத நிலைத்து இருக்க முடியாதவைகள்.
எ.கா படிமஎரிபொருட்கள், நிலக்கரி, பெட்ரோலியம், கனிமங்கள்
1. மண்வளம்:

- இந்தியா மொத்த பரப்பளவில் 328 லட்சம் சதுரகிலோ மீட்டர் பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
- இந்தியா நிலப்பரப்பளவில் உண்மையில் பெரியநாடு என்ற போதும் மிகப்பெரிய மக்கட் தொகை அளவினால் நிலப்பரப்பு மனிதன் விகிதம் சாதகமானதாக இல்லை.
- வேளாண் புள்ளி விவர அறிக்கையின்படி அதிக விவசாய பரப்பில் விவசாயம் செய்பவர்கள் (10 ஹெக்டேர் மற்றும் அதற்கு மேலும்) குறைவான எண்ணிக்கையிலும்,
மிக குறைவான விவசாய பரப்பில் விவசாயம் செய்பவர்கள் (1 ஹெக்டேர் அதற்கும் குறைவு) அதிகமான எண்ணிக்கையிலும் இருக்கின்றனர்.
- இது நிலம் துண்டாடப்படுதல் மேலும் பிரினையைக் கூடும் என்பதையே காட்டுகிறது.
/ வனவளம்:
- 2007 ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவின் காடுகள் 69.09 ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02% ஆகும்.
- 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்.
- 31.90 மில்லியன் ஹெக்டர் காடுகள் ஓரளவு அடர்ந்த காடுகள்.
- 28.84 மில்லியன் ஹெக்டர் காடுகள் பரந்தவெளி காடுகள்.
முக்கியமான கனிமவளங்கள்:
1. இரும்புத்தாது:
- இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது ஹேமடைட் மற்றும் மேக்னடைட் அதிக அளவில் கிடைக்கிறது.
- ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, கோவா, கர்நாடகா ஆகிய பகுதியில் கிடைக்கிறது.
- மேக்னடைட் தாது கர்நாடகாவில் உள்ள மேற்கு கடற்கரையில் அதிகம் கிடைக்கிறது.
2. நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:

- பூமிக்கு அடியில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
- சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
கிடைக்கும் இடங்கள்:
மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் நிலக்கரி கி டை கக்கூடியமுக் கிய மாநிலங்களாகும். வங்காளம், ஜார்கண்ட் மாநில நிலக்கரி வயல்களிலிருந்து அதிக அளவு நிலக்கரி கிடைக்கிறது.
அலுமினியத்தாது (பாக்சைட்)
- பாக்சைட் அலுமினியம் தயாரிக்க பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
ஒடிசா கிழக்குக் கடற்கரை, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
3. மைக்கா
- மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகம்
- இந்தியா உலக வியாபாரத்தில் 60% பங்குடன், மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
இது மின் உபகரணங்களில் மின் தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது.
4. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
- இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறத
கிடைக்கும் முக்கிய இடங்கள்:
டிக்பாய், பாடர்பூர், நாகர்காட்டிகா, காசிம்பூர். பள்ளியரியா. ருத்ராபூர். சிவசாகர். மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா. அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள்) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
5.தங்கம்
- இந்தியாவில் மூன்று முக்கிய தங்கச் சுரங்கப் பகுதிகள் உள்ளன.
- கிடைக்கும் இடங்கள்: கோலார் தங்கவயல், ஹட்டி -KA.
ஆந்திர மாநிலம் ராமகிரி
6. வைரம்:

- UNECE (United Nations Economic Commission for Europe) முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
- அதில் மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்.
ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும்.
கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது.
புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மா வட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கட்டமைப்பு மேம்பாடு என்பது பல்வேறு வளர்ச்சிக்கு உதவும் வகையிலான கட்டமைப்புகளாகும். இது இருவகைப்படும்.
- அ) பொருளாதார கட்டமைப்பு
- ஆ) சமூக கட்டமைப்பு
கட்டமைப்பு வசதிகள்
பொருளாதார கட்டமைப்பு:
I) போக்குவரத்து
தொலைதொடர்பு
ஆற்றல் வளங்கள்
iv) நீர்பாசனம்
V) பண மற்றும் நிதி நிறுவனங்கள்
சமூக கட்டமைப்பு
1) கல்வி
ii) பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
ii) சுகாதாரம்
(v) வீட்டு வசதி
V) பொது வசதிகள்
பொருளாதார கட்டமைப்பு
- பொருளாதார கட்டமைப்பு வசதிகள் நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.
போக்குவரத்து:
- உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து இடங்களையும் நன்றாக இணைக்ககூடிய திறன்மிகு போக்குவரத்து முறை தேவைப்படுகிறது.
- போக்குவரத்தில் 30 லட்சம் கி.மீ நீளம் கொண்ட சாலைகளால் உலகத்தின் மிகப்பெரிய சாலை போக்குவரத்து கொண்டநாடாக திகழ்கிறது.
- இருப்பு பாதையில் உலகில் நான்காவது பெரிய போக்குவரத்து அமைப்பாகும்.
- 90% கடல்வழி வாணிபம் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களான கொல்கத்தா. மும்பை, சென்னை, விசாகப்பட்டினம், கோவா ஆகிய இடங்களில் நடக்கிறது.
- இந்திய ரயில்வே முதல் Wi-fi வசதியை பெங்களுரூவில் தொடங்கியது.
- ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை 27. 8. 2007 அன்று ஒன்றாக இணைந்தது.
- தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு -1950
6. ஆற்றல்:
- புதுப்பிக்க இயலாத மின்ஆற்றல் மூலங்கள்:
இதன் பெயருக்கு ஏற்றார் போல் இத்தகைய வளங்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியாது.
அவை தீர்ந்து விட்டால் மறுபடியும் உருவாக்க முடியாது. இத்தகைய ஆற்றல் மூலங்கள் தொடர்ந்து பயன்படுத்திட அவை காலப்போக்கில் தீர்ந்து போகும்.
உதாரணம் நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
- புதுப்பிக்கக்கூடிய மின்சக்தி மூல வளங்கள்:
இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை. இவை ஏராளமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன.
உதா)
1. சூரிய சக்தி
2. காற்று சக்தி
3. அலைகள் சக்தி
4. புவி வெப்ப சக்தி
5. உயிரி எரிவாயு சக்தி
சமூகக்கட்டமைப்பு
- மனித வளங்களை மேம்படுத்துவதும், பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணை செய்வதுமான அமைப்புகளை சமூக கட்டமைப்புகள் என்கிறோம்.
- இந்த அமைப்புகள் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு வெளியே இருக்கின்றன. இந்த சமூக அமைப்புகளின் மேம்பாடு மனித வளங்களின் திறமையையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கின்றன.
(எ.கா) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது வசதி மற்றும் இதர குடிமை வசதிகள்.
குறைவான சமூக அடிப்படைக் கட்டமைப்பு, இந்தியப் பணியாளர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்க காரணமாக உள்ளது.
1. கல்வி:
- இந்தியாவில் குருகுல முறையில் பன்னெடுங்காலமாக கல்வி போததிக்கப்பட்டது. தற்போது வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கேற்ப இந்தியக் கல்விமுறை வேகமாக வளர்ந்து வருகிறது.
- மனித மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MHRD) நம்நாட்டின் கல்விக்கொள்கைகளையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
- 1976 வரை மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி அதன் பிறகு மத்திய மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பில் வந்தது.
- இந்தியக் கல்வி 10. +2 முறையைக் கொண்டுள்ளது.
- இந்திய கல்வி முறை அடிப்படையில் 6 நிலைகளை கொண்டது.
1. குழந்தைக்கல்வி
2. தொடக்கக்கல்வி
3. இடைநிலைக்கல்வி
4. மேல்நிலைக்கல்வி
5. இளங்கலைப்பட்டம்
6. முதுகலைப்பட்டம்
- வரவு செலவு திட்டத்தில் 3% GDP நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு பெருமளவு நிதி பள்ளி கல்விக்கே செலவிடப்படுகிறது.
- இந்திய கல்வி முறை 10, +2 முறையைக் கொண்டுள்ளது. உயர் கல்வியைப் பொறுத்த அளவில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பல்வேறு படிப்புகளை மற்றும் பாடங்களை வழங்கி வருகின்றன.
- பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களின் தரம் அளவிடப்படுகிறது.
II. கல்வித்துறை என்பது பல்வேறு பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியது.
இது சமூதாயத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் நடுநிலையான கல்வியளிக்கும் அமைப்பு ஆகும்.
இந்தியாவில் உடல்நலம்
- மாநில அரசின் பொறுப்பில் வருகிறது.
- மத்திய சுகாதாரம் மற்றும் நலவாழ்வு கழகம் (Central Council of Health and Welfare) பல்வேறு நலக் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
- மத்திய நலத்துறை அமைச்சகம் நலத்துறையின் நிர்வாகத்தையும், அதற்கான தொழில்நுட்ப தேவைகளையும் கவனித்துகொள்கிறது.
- இந்தியாவில் உடல்நலம் பேணுதல் பல முறைகளில் நடக்கிறது.
ஆயுர்வேதம், சித்தா, யுணானி, மூலிகை மருத்துவம். ஹோமியோபதி. ஆங்கில மருத்துவம், யோகா போன்ற பல முறைகள் உள்ளன.
- அனைத்து மருத்துவ நடைமுறைகளும் ஒரே அமைச்சகத்தின் கீழ் (AYUSH) உள்ளன.
- உடல்நலம் பேணுதலில் கேரளா முன்னிலையில் உள்ளது.
- மற்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உடல்நலம் பேணுதல் திருப்திகரமானதாக இல்லை.
இலங்கையை விட இந்தியாவில் உடல் நலம் பேணுதல் குறைவாக உள்ளது
இந்தியப் பொருளாதார சிந்தனையாளர்களின் பங்களிப்பு
1. திருவள்ளுவர்:
- இவரின் பொருளாதார கருத்துகள் திருக்குறளில் இரண்டாம் பகுதியான பொருட்பாலில் காணப்படுகின்றது.
- பொருட்பால் செல்வத்தோடு தொடர்புடையது
- மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படையை உருவாக்குவதாக நம்பினார்.
உற்பத்திக் காரணிகள்:
நிலம். உழைப்பு, முதல் அமைப்பு காலம் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த பல கருத்துகளை சொல்லிருக்கிறார்.
1. வேளாண்மை:
பிறதுறைகளின் செழுமை வேளாண்மை துறையின் செழுமையைச் சார்ந்தது.
உழவுத்தொழில் புரிபவன் மட்டுமே தலையாய மனிதன்.
பொதுநிதி
திருவள்ளுவர் பொதுநிதி பற்றி பொது வருவாய், பொதுசெலவு, நிதி நிர்வாகம் ஆகிய தலைப்புகளில் விரிவாக எழுதயிருக்கிறார்.
வருவாய் உருவாக்குதல்
b. வருவாயை சேகரித்தல்
C. வருவாய் நிர்வாகம் பொதுசெலவு
iv. பொதுச்செலவு:
சமநிதிநிலை அறிக்கையை பரிந்துரை செய்கிறார்.
- ஒரு நாடு அதன் செலவுகளைத் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில் அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை”
- உபரி நிதி நிலை கொள்கையை வலியுறுத்துகிறார்.
- பற்றாக்குறை நிதி நிலை கூடாது என்கிறார்.
பொது செலவு
பாதுகாப்பு
பொதுப்பணிகள்
சமூகப் பணிகள்
v. வெளிநாட்டு உதவி:
- வெளி உதவி கோரும் நாடுகளை நாடுகளே அல்ல என குறிப்பிடுகிறார்.
- தன்னிறைவு பொருளாதாரத்தை வலியுறுத்தினார்.
V. வறுமை மற்றும் பிச்சையெடுத்தல்:
- பசிக்கொடுமையிலிருந்து பெறும் விடுதலையே ஒவ்வொரு மனிதனும் பெறக்கூடிய அடிப்படை சுதந்திரம் என்றும், அனைத்து குடிமகனும் இதை அனுபவிக்க வேண்டும் என்கிறார்.
செல்வம்:
- செல்வம் வாழ்வதற்கான வழியே அன்றி அதுவே இலக்கல்ல என்று வள்ளுவர் கருதினார்.
- தொழில்தான் உண்மையான செல்வம் உழைப்புதான் மிகம்பெரும் வளம்.
நலம்பேணும் அரசு:
- ஒரு நலம்பேணும் அரசில் வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் இருக்காது என்கிறார்.
2. மகாத்மா காந்தியடிகள்:
- காந்தியப் பொருளாதாரம் நன்நெறியை அடிப்படையாகக் கொண்டது.
- 1921 -ல் காந்தி” ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க
நெறிகளை காயப்படுத்தினால், அந்த நடவடிக்கையும் இழுக்கானது மேலும் அது
பாவமானது என எழுதுகிறார். தார்மிக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது* என
மீண்டும் 1924 ல் கூறுகின்றார்.
காந்தியப் பொருளாதார சிந்தனைகளின் சிறப்பியல்புகள்:
1. கிராமக்குடியரசு:
- கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தார்.
2. இயந்திரங்கள்
- இயந்திரங்களை ‘மிகப்பெரிய பாவம்” என்று வர்ணித்தார். இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்கிறார்.
3. தொழில்மயம்
- தொழில்மயம் “மனித இனத்தின் பெரும் சாபக்கேடு” என்று கருதினார்.
4. உற்பத்தி பரவலாக்கம்
- வீடுகளிலேயே உற்பத்தி வேண்டும் என்றார்.
5. கிராம சர்வோதயா
- கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
6.உடல் உழைப்பு
- மனித உழைப்பு என்பதே உடல் உழைப்பு தான் என்று காந்தி உறுதிபடக் கூறுகிறார்.
7. அறக்கட்டளைக் கோட்பாடு
- “சமத்துவ சமூகத்தை உருவாக்குவது”
- முதலாளித்துவத்தை மாற்றுவது
8. உணவுப்பிரச்சினை
- உணவுப் பொருட்கள் மீதான் எந்தவிதக் கட்டுப்பாடுகளையும் இவர் எதிர்த்தார்.
இத்தகைய என்றார். கட்டுப்பாடுகள் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கும்
9. மக்கள்தொகை
- செயற்கை குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை எதிர்த்தார்.
- சுயக்கட்டுப்பாடே மக்கள் தொகையை கட்டுப்படுத்த சிறந்த வழி என்று கருதினார்.
- சுயக்கட்டுப்பாடு மற்றும் பிரம்மசரியத்தை வலியுறுத்தினார்.
10. மதுவிலக்கு
- “இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் என்றார்.
ஜவஹர்லால் நேரு:
- நவீன இந்தியாவை கட்டமைத்த முதன்மை சிற்பிகளில் ஒருவர்.
1. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை:
- ஜனநாயகத்தை உறுதியாக நம்பியவர்
- பேச்சுரிமை, குடிமக்கள் உரிமை. வாக்குரிமை, சட்டத்தின் வழி ஆட்சி
பாராளுமன்றம் ஜனநாயகம் ஆகியவற்றை நம்பியவர்.
- “மதச்சார்பின்மை இந்தியாவிற்கு நேரு தந்த மிகப்பெரிய பங்களிப்பு.
5. திட்டமிடுதல்:
- ‘திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி வளங்கள், பணம் இவற்றை சிறந்த வழிகளில் பயன்படுத்துவதை குறிக்கும்” என்று 1956 ஐந்தாண்டு திட்டத்தின்போது கூறினார். ல் 2-வது
- திட்டமிடுதலின் மூலம் ஒரு நாடு தன்னைத்தானே வளர்ச்சியடையும் என்றார்.
- அறிவியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் நேருவின் பங்களிப்பு மறக்க முடியாது.
ஜனநாயக சமதர்மம்
- நேருவின் மிகப்பெரிய பங்களிப்பு”
- சமதர்ம சமூகத்தை கட்டமைக்க விரும்பினார்.
- நேருவின் சமதர்மம் என்பது ஜனநாயக சமதர்மம் ஆகும்.
3. B.R. அம்பேத்கர் (1891-1956)
பொருளியல் சார்ந்த படைப்புகள்:
- “பழங்கால இந்திய வர்த்தகம்” (முதுகலை பட்டம் – ஆய்வு)
- இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றி வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை (Phd)
- பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதிகளின் மதிப்பீடு.
ஏகாதிபத்தியத்தின் நிதிகள் பரவலாக்கம் பற்றிய ஒரு ஆய்வு” (1921-MSC)
- 1923-ல் “ரூபாயின் பிரச்சனைகள்* (D.SC பட்டம் – லண்டன்) இதன் படி RBI கருத்தாக்கம் பெற்றது.
1. நிதிப்பொருளாதாரம் (1913-1923)
- மாகாண நிதி பெருக்கத்தை 3 நிலைகளாகப் பிரிக்கிறார்.
a. ஒப்படைப்பு வரவு செலவு திட்டம் (1871-72 முதல் 1876 – 77 முடிய)
b. ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டம் (1877 78 முதல் 1881 – 82 முடிய)
c. வருவாய் பங்கீடு வரவு செலவுத் திட்டம் (1882 முடிய) 83 முதல் 1920 21
வேளாண்மை பொருளாதாரம்:
- இந்தியாவில் குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள் -1918
- ஆடம்ஸ்மித்தின் நாடுகளின் செல்வத்தைப் போல். நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலவுடைமை விரிவாக்கம் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை கூறுகிறார்.
iii. நிதிப்பொருளாதாரம்:
- சமூக முன்னேற்றத்திற்கு சாதி மிகப்பெரிய தடையாக இருப்பதாக நம்பினார்.
- தனிநபர்கள் தங்களுக்குள் வேலைகளை பரிமாறிக்கொள்ளும் வழி இருக்கவேண்டுமென்று அவர் சொன்னார்
v. சமதர்ம பொருளாதாரம்:
- அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டுடமை ஆக்க வேண்மென்றும். நிலத்தை அரசே நிர்வகிக்க வேண்டும். கூட்டு வேளாண்மை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
J.C.குமரப்பா – 1892 -ஜனவரி – 4:
- ஜோசப் செல்லத்துரை குமரப்பா தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர்.
- கிராமப் பொருளாதர முன்னேற்ற கொள்கையின் முன்னோடி
- காந்தியப் பொருளாதாரம் என்ற கருத்தையே அவர்உருவாக்கினார்.
காந்தியப் பொருளாதாரம்:
- காந்தியின் கருத்தான கிராமத்தொழில்கள், கிராமத்தொழில் வளர்ச்சி சங்கம் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார்.
- காந்திய மதிப்பீடுகள் மற்றும் கிருத்துவத்தை உள்ளடக்கி அவர் கோட்பாடுகளைக் கொண்டு வந்தார்.
- மனிதனின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற வேண்டுமானால் சமூக பொருளாதார பிரச்சினைகள், வேலையின்மை வறுமை மற்றும் ஆதரவற்ற நிலை களைய வேண்டும் என்றார்.
- அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபீடத்தில் பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். S
- 1935-ல் கிராம தொழில் கழகத்தை தோற்றுவித்தார்.
- “நிலைத்த பொருளாதாரம் இயேசுவின் வழிமுறைகள் (1945)* மற்றும் கிறிஸ்துவம் அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் (1945) ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதினார்
- வரலாற்று ஆய்காளர் இராமச்சந்திர குஹா அவர்கள் குமரப்பாவை “பச்சை காந்தி” என்று அழைத்து சிறப்பிக்கிறார். அடித்தளமிட்டதால்) (இந்திய சுற்றுச் சூழலியல் குறித்து
V.K.R.V.ராவ்:
- சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்கள் D.R. காட்கில், CN வக்கில் மற்றும் V.K.R.V. ராவ்
- V.K.R.V. ராவ் ஒரு தேர்ந்த எழுத்தளார்
அவர் மூன்று முக்கிய கருத்துகளில் ஆர்வமுடையவராக இருந்தார்.
1. தேசிய வருமானம்
- முன்னேறி கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் முதலீடு, சேமிப்பு, பெருக்கி ஆகியவற்றை ஆய்வு செய்தல்
- வளர்ச்சி குன்றிய நாடுகளின் தொழில்மயமாக்கலின் விளைவுகளை. தேசிய வருவாயை இணைத்து படிக்கவேண்டும்.
- “முழு வேலைவாய்ப்பும். பொருளாதார முன்னேற்றமும் என்ற ராவின் ஆய்வுக்கட்டுரை கருதப்படுகிறது. வேலைவாய்ப்புதுறையில் மிகச்சிறந்த ஒன்றாக
11. பன்னாட்டு உணவு உதவி
- உலக வறுமையை ஒழிப்பதில் ராவ் சிறந்த கொள்கைகளை வகுத்துக் தந்தது மட்டுமல்லாது உணவுப் பொருட்களை பன்னாட்டு அளவில் பரிமாறிக் கொள்ள வேண்டும் எனக் கூறினார் S
III. சமதர்மத்திற்கு ஆதரவு
- அரசாங்கமே பொருளியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது என்றும் கூறியுள்ளர்.
IV. தொழில்மயமாதல்
- இந்தியப் பொருளியல் பொருளியல் வாழ்வி தவறு? (1938) என்ற சிறு புத்தகத்தில் இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவிற்கும் தனிநபர் ஊட்டச்சத்து குறைவிற்கும் பின்வரும் காரணங்களை விளக்குகிறார்.
a.முறையற்ற நிலவுடைமை
b. பயிர்களுக்கு குறைவான நீர்பாசன வசதி
C. வேளாண்மையில் அதிக மக்கள் தொகை அழுத்தம்.
d. முதலீடு இன்மை
V. கிராம தொகுதிகள்
- கிராம குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
- ஊரக வளர்ச்சிக்காக கிராமங்கள், தொகுப்பாக ஒரே அலகாக செயல்பட வேண்டும்.
VI. முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி
- “முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு1952 என்ற ராவ் அவர்களின்
புத்தகம் பேரியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கியது.
நிறுவனக் கட்டமைப்பாளர்
- டெல்லி பொருளாதாரப் பள்ளி – டெல்லி
- பொருளாதார வளர்ச்சி கழகம் டெல்லி
- சமூக பொருளாதார மாற்றத்திற்கான கழகம் Bangalore போன்ற தேசிய அளவிலான மூன்று ஆராய்ச்சி நிறுவணங்களை நிறுவினார்.
- ராவ் J.M. கீன்சின் மாணவர் மட்டுமல்லாது கோலின் கிளார்க் அவர்களுடன் பணி செய்து இருக்கிறார். S
- H.W. சிங்கர்கின்சன் மாணவர்களில் சிறந்தவராக V.K.R.V. ராவ் அவர்களை சுருகிறார்.
அமர்த்தியாகுமார் சென்
- நோபல் குழு 1998 – ல் இவரின் சமூகத் தெரிவு கொள்கை. வளர்ச்சிப் பொருளாதாரம், வறுமை மற்றும் பஞ்சங்கள் பற்றிய ஆய்வு
- உரிமங்கள் திறன் முன்னேற்றம், ஆகியவற்றிற்காக நோபல் பரிசு வழங்கியது.
1. வறுமை மற்றும் பஞ்சம்
- உரிமம் மற்றும் இழப்பு” பற்றிய ஓர் கட்டுரை (1981) சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
வறுமை மற்றும் சமத்தவமின்மை:
- வருமானப் பகிர்வு மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் நுகர்வு ஆகியவை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும் என்கிறார்.
III திறன்பற்றிய கருத்து
- திறன்களை வளர்ப்பது முக்கியமானது என்கிறார்.
- இவரின் கருத்துப்படி திறன் என்பது அடிப்படை கச்சாப் பொருட்களை மக்கள் நலத்திற்காக மாற்றி அமைப்பது ஆகும்.
IV. உரிமைகள்:
- ஊட்டச்சத்து உணவு. மருத்துவம், உடல் நலப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு பஞ்சத்தின் போது வழங்கப்படும் உணவு நமது உரிமைகாளக மாற வேண்டும் இதன் தோல்வியே பஞ்சம் ஏற்படுவதற்கு காரணமாகும்.
V. தொழில் நுட்பத் தெரிவு:
- மூலதன செறிவு நுட்ப முறையில் உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்று “தொழில் நுட்பத் தெரிவு என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.