வடபெரும் சமவெளிகள்
- வட இந்திய பெரும் சமவெளி மேடு பள்ளமற்ற ஒரு சீரான சம பரப்பாக அமைந்துள்ளது.
இவை இமயமலை மற்றும் விந்திய மலைகளிலுள்ள ஆறுகளின் படியவைத்தல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன.
- இமயமலையின் தெற்கே சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளால் உருவாக்கப்பட்ட சமவெளி உலகின் மிகப்பெரிய சமவெளியாக உள்ளது.
- 2400 கி.மீ தீளமும் 7 இலட்சம் ச.கி.மீ பரப்பும் கொண்டது. அகலம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 240 கி.மீ முதல் 320 கிமீ வரை காணப்படுகிறது.
இவை
பாகர் -கரடுமுரடான படிவுகள்
தராய் – சதுப்பு படிவுகள்
பாங்கர் – பழைய வண்டல் படிவுகள்
காடர் – புதிய வண்டல் படிவுகளை கொண்டுள்ளன.
வடபெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள்:
பாபர் சமவெளி
- இச்சமவெளி இமயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆனது.
- இப்படிவுகளில் நுண்துளைகள் அதிகமாக உள்ளதால் இதன் வழியாக ஓடும் சிற்றோடைகளின் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விடுகின்றன.
- இச்சமவெளி சிவாலிக் குன்றுகளின் தென்புறம் மேற்கில் ஜம்மு முதல் கிழக்கே அஸ்ஸாம் வரை அமைந்துள்ளது.
- இதன் அகலம் மேற்கே ஜம்முவில் 15 கி.மீ கிழக்கே அஸ்ஸாமில் 8 கி.மீ
தராய் மண்டலம்
- தராய் மண்டலம் இமயமலையின் அடிவாரத்தில் காணப்படும் சேறும் சகதியும் கொண்ட நிலப்பகுதி.
- பாபர் பகுதியில் மறைந்த ஆறுகள் இப்பகுதியில் உருவாகின்றன.
- சுமார் 15 கி.மீ முதல் 30கிமீ வரை அகலம் கொண்டது.
- காடுகள் வளரவும், வனவிலங்குகள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் உள்ளது.
- இவை கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது.
- பெரும்பான்மை மாநிலங்களில் தராய் காடுகள் வேளாண்மை சாகுபடிக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.
பாங்கர் சமவெளி
- மேட்டு நில வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்
- பழைய வண்டல் மண் படிவுகளால் உருவானவை
- வெள்ளப்பெருக்கு ஏற்படாத உயர்நிலப்பகுதிகளில் அமைந்துள்ளது.
- இவை பெரும்பாலும் களிமண்ணால் ஆனவை
- இம்மண்ணானது கருமை நிறத்துடன், வளமான இலைமக்குகளைக் கொண்டும், நல்ல வடிகாலமைப்பைக் கொண்டுள்ளதால் இது வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது.
காதர் சமவெளி (அ) பெட் நிலம்
- ஆறுகளால் மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வரப்பட்டு படிய வைக்கப்படும் புதிய வண்டல் படிவுகள்.
- காதர் மணல், களிமண், சேறு மற்றும் வண்டல்களை கொண்ட வளமிக்கச் சமவெளியாகும்.
டெல்டா சமவெளி

- காதர் சமவெளியைத் தொடர்ந்து காணப்படும் பகுதி டெல்டா சமவெளி
- கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளால் முகத்துவாரத்தில் உருவாக்கப்பட்ட வளமான முக்கோண வடிவ நிலப்பகுதியே சுந்தரவன டெல்டா எனப்படுகிறது.
- இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வேகத்தில் உருவாகும் டெல்டா ஆகும்.
- இப்பகுதிகளில் ஆறுகளின் வேகம் குறைவாக இருப்பதால் படிவுகள் வைக்கப்படுகின்றன.
- டெய்டா சமவெளி புதிய வண்டல் படிவுகள், பழைய வண்டல் படிவுகள், மற்றும் சதுப்பு நிலங்களை கொண்டது.
- வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி சார்ஸ் எனவும் சதுப்பு நிலப்பகுதி பில்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
- கங்கையின் டெல்டா பகுதி 1.9 லட்சம் ச.கி.மீ பரப்பு கொண்டது.
வட இந்திய சமவெளியினை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்
ராஜஸ்தான் சமவெளி (3 ல் 2 பங்குபாலைவனம்)
- ராஜஸ்தான் சமவெளி அரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
- 1,75,000 சகிமீ பரவியுள்ளது
- இச்சமவெளி கடல் மட்டத்திலிருந்து 300 மீ உயரம் கொண்டது.
- இச்சமவெளி தூனி மற்றும் மறைந்து போன சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ளது.
- இச்சமவெளியின் முக்கிய ஆறான லூனி ஆறு கட்ச் வளைகுடாவில் கலக்கிறது.
- லூனி ஆற்றின் வடபகுதி உள்நாட்டு வடிகால் அமைப்புடன் காணப்படுகிறது.
- வேத காலத்தில் சிறந்த விளங்கிய சரஸ்வதி ஆறு மறைந்து போனது.
ஆனால் தற்போது உள்ள காகர் ஆறு சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி என நம்பப்படுகிறது.
- பல உப்பு ஏரிகள் இராஜஸ்தான் சமவெளியில் அமைந்தள்ளது.
உதா) ஜெய்ப்பூருக்கு மேற்கே 65 கி. மீ தொலைவில் சாம்பார் (அ) புஷ்கர் ஏரி அமைந்துள்ளது.
- இச்சமவெளியில் வறண்ட ஆற்றுப்படுகைகள் பல காணப்படுகின்ற
காரணம் சமீபத்திய புவி அமைப்பு மற்றும் ஆறுகள் தங்களது போக்கை மாற்றி கொண்டதே இதற்கு காரணம்
- எப்பொழுதும் பாலைவனத்தின் கிழக்குப் பகுதி பாறைகளாகவும், மேற்குப் பகுதி நகரும் மணல் திட்டுகளாகவும் உள்ளன.
. பஞ்சாப் – ஹரியானா சமவெளி
- வளமான பஞ்சாப் – ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ள
- பஞ்சாப் ஹசி சமவெளி ராவி, சட்லஜ், பியாஸ் ஆறுகளின் படிவுகளால் உருவானது
- பரப்பளவு – 175 லட்சம் சதுர கிலோ மீட்டர்
- இச்சமவெளி நீச்கிரி பேடாகவும். கங்கை- யமுனை, யமுனை ஆற்றிடைச் சமவெலியாகவும் உள்ளது. ஆற்றிடைச் சமலெலி என்பது (தோ ஆப்) இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட செழிப்பான வண்டல் மண் நிறைந்த சமவெளி ஆகும். சட்லெஜ்
- டெல்லி முகடு பஞ்சாப் – ஹரியானா சமவெளிகளை கங்கை சமவெளியில் இருந்து பிரிக்கிறது.
- ஹரியானாவிலுள்ள காக்ரா நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பே ஹரியானா சமவெளியாக உள்ளது.
கங்கைச் சமவெளி
- உலகின் மிகப்பெரிய பரந்த சமவெளி (டெல்லி – கல்கத்தா)
- மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் வங்கதேசம் வரை சுமார் 1500 கி. நீளத்துடன், 300 கி.மீ அகலத்துடன் அமைந்துள்ளது.
- பரப்பளவு – 3.75 வட்சம் ச.கிமீ
- கங்கை சமவெளி உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் பரவி உள்ளது.
- ராம்கங்கா கோமதி, காக்ராகாண்டம், கோசி, யமுனா போன்ற நதிகள் வடக்கிருந்தும், சோன், சம்பல், பீட்வா போன்ற நதிகள் தெற்கிலிருந் கங்கை நதியோடு கலந்து இந்தியாவின் மிகப்பெரிய சமவெளியை உருவாக்குகின்றன
- கங்கை சமவெளியினுடைய சரிவு கிழக்கு மற்றும் தென்கிழக்குநோக்கி மென் சரிவாக உள்ளது
- இச்சமவெளியின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 200 மீ
- இச்சமவெளியின் மேற்குபகுதியில் கங்கை யமுனையின் ஆற்றிடைச் சமவெளி (Doab) அமைந்துள்ளது.
- இச்சமவெளியின் கிழக்கில் ரோஹில்கண்ட் தாழ்நிலம் உள்ளது.
- ஆற்றுப்பாதையின் மையத்தில் படிவுகள் நிறைந்துள்ளதால் ஆற்றுநீரின் போக்கு மாறி வருகிறது.
எனவே தான் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
- பீகாரின் துயரம் எனப்படும் கோசி ஆறு தன் ஆற்றுப்போக்கை சமீப காலங்களில் 100 கி.மீ வரை மாற்றி அமைத்துள்ளது.
- இந்து மக்கள் கங்கை, யமுனை ஆற்றை புனிதமாக கருதுகின்றனார்.
இதன் கரைகளில் அமைந்துள்ள ஹரித்துவார், மதுரா வாரனாசி அலகாபாத் போன்றவை புனித தலங்களாக அமைந்துள்ளன.
- கங்கைச் சமவெளியின் தாழ்ந்த பகுதியில் கங்கை பிரம்மபுத்திரா ஆறுகள் பல இணையாறுகளாக பிரிந்து உலகின் மிகப்பரந்த சமவெளியை உருவாக்குகின்றன.
- இச்சமவெளியின் தாழ்ந்த பகுதியான சுந்தரவனம், ஒதத்தால் ஏற்படும் அடர்ந்த சதுப்பு நிலக் காடுகளை கொண்டுள்ளது.
IV. பிரம்மபுத்திரா சமவெளி
- வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
- பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி அஸ்ஸாமில் அமைந்துள்ளது.
- பரப்பளவு-56. 275 ச.கி.மீ (தாழ் நில சமவெளி)
- பிரம்மபுத்திரா ஆறு திபெத்தில் சாங்கோ எனவும் அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்தியாவில் நுழையும் முன் திகாங் என்னும் பள்ளத்தாக்கை உருவாக்குகின்றது.
- அஸ்ஸாம் குன்றுகளில் ஆறுகள் உருவாகி பிரம்மபுத்திராவுடன் கலந்து வண்டல் விசிறிகளை ஏற்படுத்துகின்றன.
- வண்டல் விசிறிகளால் தராய் எனப்படும் சதுப்பு நிலக்காடுகள் உருவாகியுள்
- களிமண் நிறைந்த சதுப்பு நிலங்கள் மிக அதிக அளவில் காணப்படுகின
3. தீபகற்ப பீடபூமி
- தீபகற்ப டேபூமி வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ளது.
- இது முக்கோண வடிவம் கொண்டது.
- இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவாக உள்ளது.
- சுமார் 16 லட்சம் ச.கி.மீ பரப்பளவை கொண்டது.
இது நாட்டின் பரப்பில் சுமார் பாதியளவு கொண்டது.
இப்பீடபூமி
வடமேற்கு – ஆரவல்லி மலைத் தொடர்
- வடக்கு வடகிழக்கு – பண்டல் கண்ட் உயர்நிலப்பகுதி. கைமூர், ராஜ்மகால் குன்றுகள்
- மேற்கு – மேற்குதொடர்ச்சி மலைகள்
- கிழக்கு – கிழக்குத் தொடர்ச்சி மலைகள் எல்லையாக
- இப்பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலருந்து சுமார் 600 மீ உயரத்தில் அமைந்தள்ளது
- ஆனைமலையில் அமைந்துள்ள ஆனைமுடி (2695 மீ) இப்பிடமியின் உயர்ந்த சிகரம்
- விந்திய மலைக்கு தென் பகுதியில் பாயும் ஆறுகளான கோதாவரி. காவிரி, மகாந்தி. கிருஷ்ணா போன்றவை கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
- விந்தியமலையின் தென்பகுதியிலுள்ள பிளவு பள்ளத்தாக்குகளின் வழியே நர்மதை
மற்றும் தபதி ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன.
- இப்பீடபூமி கோண்டுவானா நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்.
- நர்மதை ஆறு தீபகற்ப பீடபூமியை இரு சமமற்ற பகுதிகளாகப் பிரிக்கின்றது.
1. வடபகுதி மத்திய உயர்நிலம்
Π. தென்பகுதி
தக்காண பீடபூமி
1. மத்திய உயர்நிலங்கள்
- நர்மதை ஆற்றிற்கும், வடபெரும் சமவெளிக்கும் இடையே அமைந்துள்ளது.
- இப்பகுதியில் அமைந்துள்ள ஆரவல்லி மலைத்தொடர் குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியாக டெல்லி வரை சுமார் 700 கி.மீ வரை நீண்டுள்ளது.
- டெல்லிக்கு அருகே சராசரியாக 400 மீ உயரத்தையும், தென்மேற்கில் 1500 மீ உயரத்தையும் கொண்டுள்ளது.
- ஆரவல்லி மலைத் தொடரின் உயரமான சிகரம் – குருசிகார் (1722மீ)
1. மாளவ பீடபூமி
- மேற்குபகுதியில் உள்ள மத்திய உயர்நிலம் மாளவ பீடபூமி
- இப்பீடபூமி ஆரவல்லி மலைத்தொடருக்கு தென்கிழக்கிலும் விந்திய மலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
- சம்பல் பீட்வா, கென் போன்ற ஆறுகள் இப்பீபூமியில் பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்கின்றன.
சம்பல் நதியும், துணையாறுகளும் வடபகுதியில் அரிப்பாலான பள்ளங்களை உருவாக்குகின்றன.
- மாளவப் பீடபூமியின் கிழக்குத் தொடர் பகுதியை பண்டல்கண்ட் என்றும் இதன் தொடர்ச்சிவை பாகல்கண்ட் என்றும் அழைப்பர்.
இவை லாவா எனப்படும் எரிமலைக் குழம்பால் உருவாகி கருப்பு மன்னால் ஆன பகுதி
2. பண்டல்கான்ட் உயர்நிலம்
- யமுனையாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
- இது தீப்பாறைகளாலும், உருமாறிய பாறைகளாலும் உருவாக்கப்பட்டது.
- இதன் வடபகுதியில் கங்கை, யமுனை ஆறுகள் வண்டல் படிவுகளை படிய வைக்கின்றன.
மற்றும் உருவாக்குகின்றன. போன்ற ஆறுகள் ஆழமான பள்ளத்தாக்குகளை
3. பகல்கண்ட்
- பகல்கண்ட் மைக்காலா மலைத்தொடரின் கிழக்கே அமைந்துள்ளது.
- பீடபூமியின் மத்திய பகுதி சோன் ஆற்றுக்கும். மகாநதி ஆற்றுக்கும் இடையே நீர்ப்பிரிமேடாக அமைந்துள்ளது.
4. சோட்டாநாகபுரி பீடபூமி
- சோட்டா நாகபுரி பீடபூமி மத்திய உயர்நிலங்களின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
- இப்பூடபூமி ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும் பகுதி, மேற்கு வங்காளம், பீகார். சத்தீஸ்கர்
மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
இப்பகுதி இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிமவளத்திற்கு புகழ் பெற்றது.
- தாமோதார். சுபர்ணரேகா, கோயல், பராக்கர் ஆறுகள் இதன் வழியே பாய்கின்றன.
- இதன் மையத்தில் தாமோதார் ஆறு மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது.
- ஹசாரிபாக் பீடபூமி தாமோதர் ஆற்றின் வடக்கிலும், ராஞ்சிப் பீடபூமி தெற்குப் பகுதியிலும், இராஜ்மகால் குன்றுகள் வடகிழக்கிலும் அமைந்துள்ளன.
II. தக்காண பீடபூமி
- தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பு
- இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.
- 7 வட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
- கடல் மட்டத்திலிருந்து 500மீ முதல் 1000மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.
- இதன் வடமேற்கு – விந்திய சாத்பூரா மலைகள்
வடகிழக்கில்-இராஜ்மகால் குன்றுகள்
வடக்கு – மகாதேவ், மைக்காலா மலைத்தொடர்கள்
மேற்கு – மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்கு – கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் எல்லையாக உள்ளன.
- தக்காண பீடபூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளதால், மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி ஆறுகள் வங்காள விமிகுடாவில் கலக்கின்றன.
- இதன் வடபகுதி தீப்பாறை கரிசல் மண்ணையும் கொண்டுள்ளது. தென்பகுதியான கர்நாடக பீடபூமி நீலகிரி மலைத்தொடருடன் இணைகிறது.
- தெலுங்கானா பீடபூமி வழியாக கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு ஆறுகள் ஓடுகின்றனட
தீபகற்ப இந்தியாவிலுள்ள மலைத்தொடர்கள்
1. ஆரவல்லி மலைத்தொடர் (இராஜஸ்தான்)
(சிதைந்த மலை, எஞ்சிய மலை, பிண்ட மலை)
- உலகின் மிகப்பழமையான மடிப்பு மலைத் தொடராகும்.
- வடகிழக்கில் இருந்து தென்மேற்காக பரவியுள்ளது.
- உயர்ந்த சிகரம் அபு மலையில் உள்ள குருசிகார்.
- பாறைகள் சிதைக்கப்பட்டு தற்போது எஞ்சிய மலையாக உள்ளது.
2. விந்திய மலைத் தொடர்
- நர்மதை ஆற்றின் பள்ளத்தாக்கிற்குமேல் செங்குந்து சரிவாக காணப்படுகிறது.
- நர்மதை ஆற்றிற்கு இணையாக கிழக்கிலிருந்து மேற்காக 1200 கி.மீ வரை நீண்டு செல்கிறது.
- இம்மலைத்தொடர் கங்கையாற்றின் தொகுதிகளுக்கும் தென்னிந்திய ஆறுகளுக்கும் இடையே நீர்பிரிமேடாக இருக்கிறது.
3. சாத்பூரா மலைத்தொடர்
- சாத்ரா என்றால் ஏழு மடிப்புகள் என்று பொருள்.
- இது ஏழு மலைகளை கொண்டு தொடர்ச்சியாக உள்ளது.
- நர்மதை, தபதி ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
- நீளம் 900 கி.மீ
- நர்மதை ஆற்றின் பக்கச்சுவர்கள் எனப்படுவது விந்திய சாத்பூரா மலைகள்
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்கள்
- வடக்கே தபதி நதியிருந்து தெற்கே கன்னியாகுமரி1600 கிமீ வரை பரவியுள்ளது
- இவை மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
- இதன் உயரமானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்ல செல்ல அதிகரிக்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலையானது மேற்கு கடற்கரை சமவெளிகளில் செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக நதிகள் மேற்கு திசையில் பாய்ந்து நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகின்றன.
உதா) செராவதி ஆற்றின் குறுக்கே உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி (270மீ)
வேறுபெயர் – மகாத்மா காந்தி (அ) செரசப்பா நீர்வீழ்ச்சி
- ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி
- இம்மலைத்தொடரின் கிழக்குப் பகுதி மென்சரிவாகக் காணப்படுகிறது.
கிழக்கு சரிவில் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆறுகள் உருவாகின்றன.
முக்கிய கணவாய்கள்
- மலைகளின் குறுக்கே அமைந்த இயற்கை பாதைகள் கணவாய்கள் எனப்படும்.
வடபகுதி – தால் கணவாய் (மும்பை – நாசிக்) போர் கணவாய் (மும்பை -பூனா) தென்பகுதி -பாலக்காட்டு கணவாய் (தமிழ்நாடு கேரளண
- பாலக்காட்டு கணவாய் கேரள கடற்கரையை, தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் இரயில்பாதைகள் மூலம் இணைக்கிறது.
முக்கிய மலைத் தொடர்கள்
- கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரி மலையில் ஒன்றிணைகின்றன.
- நீலகிரியில் தமிழ்நாட்டின் உயரமான சிகரமான தொட்டபெட்டா (2637 மீ) அமைந்துள்ளது.
- நீலகிரி மலையில் தொட்டபெட்டா சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது உதகமண்டலம்.
- தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (26955)
- ஆனைமலை, ஏலக்காய் மலை மற்றும் பழனிமலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் ஆனைமுடிச்சிகரம் அமைந்துள்ளது.
ஆனைமுடியின் வடக்கில்
வடகிழக்கு
பழனி மலை
தெற்கு
ஏலமலை போன்றவை பிரிந்து செல்கின்றது.
- பழனிமலையின் தென்முனையில் அமைந்துள்ளது கொடைக்கானல்
- மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரிக்கு 20 கி.மீ தூரத்தில் முடிவடைகிறது.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

- தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு காணப்படுகிறது.
- இம்மலைத்தொடர் பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது.
- கிழக்கு கடற்கரையை ஒட்டி தொடர்ச்சியற்ற பல தொடர்களாக உள்ளது.
- ஒரிசாவிலுள்ள மகாநதிக்கும். தமிழ்நாட்டில் உள்ள வைகை ஆற்றிற்கும் இடையில் பிளவுபட்ட குன்றுகளாக காணப்படுகிறது.
- கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைபட்ட பகுதியில் இம்மலைகள் காணப்படுவதில்லை.
- கோதாவரி ஆற்றுப் பள்ளத்தாக்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளை வடபகுதி, தென்பகுதி என இரண்டாக பிரிக்கிறது.
- கிழக்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரமான மகேந்திரகிரி (1501 மீ) ஒரிசாவில் அமைந்துள்ளது.
- இதன் தென்பகுதியில் நல்லமலை உள்ளது.
- இது பளிங்கு மற்றும் களிமண்ணின் ஒரு வகையான சிலேட்டு மண்ணால் உருவானது.
முக்கிய மலைத் தொடர்கள்
திருப்பதி
நல்ல மலை
கொல்லி மலை
ஜவ்வாது மலை
பச்சை மலை
சேர்வராயன் மலை
நகரி குன்றுகள்
- கண்ட காருண்ய காடுகள் இம்மலைத் தொடர்களில் அமைந்துள்ளது.
- தீபகற்ப பீடபூமியில் அமைந்த மலைவாழிடங்கள்
உதகமண்டலம்.
ஏர்க்காடு
கொடைக்காணல்
பசைமார்க்கி (MP)
மகாபலேஸ்ad
4.கடற்கரை சமவெளிகள்
- மேற்கில் ரான்ஆப் கட்சிலிருந்து கிழக்கே கங்கை பிரம்மபுத்திரா சமவெளி வரை 6000 கி.மீ தூரம் வரை பரவிக் காணப்படுகிறது.
- இக்கடற்கரைச் சமவெளிகள் ஆறுகள். கடல் அலைகள் ஆகியவற்றின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் உருவானவை.
இதன் இருவகை
I மேற்கு கடற்கரை சமவெளி
II கிழக்கு கடற்கரை சமவெளி
1. மேற்கு கடற்கரை சமவெளி
- மேற்கு தொடர்ச்சி மலைக்கும். அரபிக்கடலுக்கும் இடைபட்ட நிலப்பரப்பு
- இவை வடக்கில் கட்ச் பகுதியில் ரான் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது
- அகலம் 10 கி.மீ முதல் 80 கிமீ வரை
- மேற்கு கடற்கரையின்
வடபகுதி
கொங்கன கடற்கரை
மத்திய பகுதி –
கனரா கடற்கை
தென் பகுதி
மலபார் கடற்கரை என அழைக்கப்படுகிறது.
1. குஜராத் (அ) கத்தியவார் (அ) சௌராஷ்டிரா சமவெளி
- குஜராத் சமவெளி கட்ச் மற்றும் கத்தியவார் பகுதிகளின் கிழக்கு பகுதிகளில் நர்மதை, தபதி, மாஹி, சபர்மதி ஆறுகளால் உருவாக்கப்பட்டது.
- குஜராத்தின் தென் பகுதியும். காம்பட்டின் கடற்கரை பகுதியும் சேர்ந்து குஜராத் சமவெளி எனப்படுகிறது.
- இது சதுப்பு நிலங்களின் தொடர்ச்சியாகும்.
- உயர் ஒதத்தின்போது கடற்கரையில் வெள்ளப்பெருக்குஏற்படுகிறது.
- இதில் புகழ்பெற்ற கிர்காடுகள் (ஆசிய சிங்கம்) அமைந்துள்ளது’
2. கொங்கண சமவெளி
- குஜராத்திற்கு தெற்கே கோவா வரை 500 கி.மீ பரவியுள்ளது.
- இங்கு கடலலை அரிப்புகளால் உருவான ஓங்கல், முருகைகள், தீவுகள் மும்பைக்கு தெற்கில் காணப்படுகின்றன.
- இதன் வடபகுதி மணற்பாங்காகவும், தென்பகுதி கரடுமுரடான பாறைகளாகவும் காணப்படுகிறது.
3. கர்நாடகா சமவெளி
- கோவாவிலிருந்து மங்களூர் வரை பரவியுள்ளது.
- இச்சமவெளி செங்குத்து சரிவை உருவாக்குகின்றன. கொண்டுள்ளதால் நீர்வீழ்ச்சிகளை
- ஷெராவதி ஆறு இதன் வழியே பாய்கிறது.
இங்கு உள்ள நீர்வீழ்ச்சி – ஜோக் (அ) செரசப்பா (அ) மகாத்மா காந்தி நீர்வீழ்ச்சி
4. மலபார் சமவெளி
- மங்களூருக்கும் கன்னியாகுமரிக்கும் நடுவே அமைந்துள்ளது.
- ஆழமில்லாத பல காயல்கள், உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ் போன்றவை இப்பகுதியில் காணப்படுகின்றன.
- 20 – 100 கிமீ வரை அகலமும், 550 கி.மீ நீளமும் கொண்டுள்ளது.
- கேரளாவின் மிகப்பெரிய சரியான வேம்பநாடு ஏரி இச்சமவெளியில் அமைந்துள்ளது.
கிழக்கு கடற்கரைச் சமவெளி
- கங்கை கழிமுகத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை பரவியுள்ளது.
- கழிமுகம் ஆறுகள் கடலோடு கலக்கும் இடம்.
- கிழக்குதொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே மேற்கு வங்காளம். ஒடிசா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
- சராசரி அகலம் – 120 கி.மீ (முகத்துவாரம் – 200 கி.மீ)
- இச்சமவெளி புதிய வண்டல் படிவுகளால் நன்கு வரையறுக்கப்பட்ட கடற்கரையைக் கொண்டது.
- மேற்கு கடற்கரை சமவெளியை விட பரந்தும் அகலமானதாகவும் காணப்படுகிறது.
1. உத்கால் சமவெளி
- ஒரிசா கடற்கரையில் இருந்து 400 கிமீ நீண்டு மகாந்தி ஆற்று சமவெளியையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
- இச்சமவெளியில் மகாநதியின் தெற்கே, சிலிகா ஏரி அமைந்துள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரியாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி-ஊலர் ஏரி
2. ஆந்திரா சமவெளி
- பெரகம்பூர் மற்றும் புலிகாட் ஏரிக்கு இடையில் அமைந்துள்ளது.
- இச்சமவெளி கோதாவரி, கிருஷ்ணா ஆற்றுச் சமவெளிகளால் ஆனது.
- கோதாவரி ஆற்றுக்கும். கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே கொல்லேரு ஏரி அமைந்துள்ளது.
- ஆந்திர கடற்கரை சமவெளி, துறைமுக அமைவிடத்திற்கு ஏற்றதாக உள்ளது.
உதா) விசாகப்பட்டினம், மசூலிப்பட்டிணம்.
- தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவிற்கும் பொதுவான எல்லை கொண்ட ஏரி பழவேற்காடு (அ)புலிக்காட் ஏரி.
- புலிக்காட் ஏரியின் நிலப்பரப்பில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது.
- இச்சமவெளியில் மகாநதி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே காணப்படும் கடற்கரை – வட சர்க்கார்.
- கிருஷ்ணா (ம) காவிரி ஆறுகளுக்கு இடையே உள்ள கடற்கரை – சோழமண்டல கடற்கரை.
3. தமிழக கடற்கரை சமவெளி
- பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி வரை பரவி உள்ளது
- அகலம் – 100 கி.மீ. நீளம் 992 கி.மீ
- இச்சமவெளியில் சோழமண்டல கடற்கரை அமைந்துள்ளது.
- இங்குள்ள காவிரி ஆற்றுச்சமவெளிகள் தென்னிந்தியாவின் முக்கிய களஞ்சியமாக அமைந்துள்ளன
- உலகின் மிகப்பெரிய 2 வது கடற்கரை -மெரினா கடற்கரை உலகின் மிகப்பெரிய கடற்கரை -மியாமி கடற்கரை (USA)
- சோழர்களின் ஏரி வங்காள விரிகுடா
- மேற்கு கடற்கரை சமவெளியும், கிழக்கு கடற்கரை சமவெளியும் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி
5. பெரிய இந்திய பாலைவனம் (தார் பாலைவனம்)
- பரப்பளவு – 2 இலட்சம் ச.கி.மீ
- இந்தியாவிற்கும். பாகிஸ்தானுக்கும் இடையில் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது
- தார் பாலைவனம் உலகின் 17 வது மிகப்பெரிய பாலைவனம்
- உப அயன மண்டல பாலைவனங்களில் 9 ஆவது பெரிய பாலைவனம்.
- இப்பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே இராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
- இந்த பாலைவனப் பகுதி மருஸ்தலி என்றும் அரைபாலைவனப் பகுதி பயங்க என்றும் இரு பகுதிகளை கொண்டது.
இந்திய தீவுகள்

- இந்தியப் பெருங்கடலில் இருபெரும் தீவுக்கூட்டங்கள் காணப்படுகிறது.
1. வங்காள விரிகுடா – அந்தமான் நிக்கோபர் தீவுகள் (572 தீவு)
2. அரபிக்கடல் இலட்சத் தீவுகள் (27 தீவுக் கூட்டங்கள்)
1. அந்தமான் நிக்கோபர் தீவுகள் (மரகதத் தீவு, 572 தீவுகள்)
- பரவல் – 6 வட அட்சம் முதல் 14 கட அட்சம் வரை
90 கிழக்கு நீக்கம் முதல் 4 கிழக்கு தீர்க்கம் வரை
- இவை புவி உள் இயக்க விசைகள், எரிமலைகளால் உருவானதாகும்.
- பரப்பு -8240 சகிமீ
- பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதால் அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதால் அடர்ந்த காடுகள் இங்கு காணப்படுகிறது.
- இந்த தீவு கூட்டத்தை ரண்டாக பிரிக்கலயாம்
வடபகுதி – அந்தமான் (25 தீவு – மக்கள்)
தென்பகுதி -நிக்கோபர் (13 தீவு)
- இதன் நிர்வாக தலைநகரம் – போர்ட் பிளேயர்
- அந்தமான் தீவுக் கூட்டங்களை, நிக்கோபர் தீவுக்கூட்டங்களில் இருந்து பிரிப்பது – 10
- அந்தமான் கூட்டத்தில் பெரியது – கிரேட் நிக்கோபர்.
- இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆட்சிப் பகுதி
- உயர்நீதி மன்றம் – கல்கத்தா
- இந்தியாவின் ஒரே இயங்கும் எரிமலையான பாரன் தீவு அந்தமானில் உள்ளது.
- இந்தியாவின் தென்கோடி முனையான இந்திரா முனை (அ) பிக்மோனியன் முனை அந்தமானில் உள்ளது.
- ஆசியாவின் மிகப்பெரிய மர ஆலை cellular Jall இங்குஉள்ளது.
2. இலட்சத் தீவுகள் (கடலின் புத்திரன்)

- அரபிக்கடலில் கேரளா கடற்கரைக்கு மேற்கு அமைந்துள்ள முருகைப் பாறைகளால் ஆன தீவு (தூரம் 200-500 கி.மீ)
- பரப்பு – 32 ச.கி.மீ (27 தீவு கூட்டங்களில் 11 தீவு கூட்டத்தில் மக்கள் உள்ளனர்)
- பவளப்பாறைகள் மிகுந்த பகுதிகளாகும்.
- நிர்வாகத் தலைநகரம் – கவரத்தி
- இலட்சத்தீவுகளை மாலத்தீவிலிருந்து பிரிப்பது – 8 கால்வாய்
- இங்கு மனிதர்கள் வசிக்காத பிட்தீவு, பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்றது.
- இலட்சத் தீவு, மினிக்காய், அமினித் தீவு கூட்டங்கள் 1973 முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது
- இலட்சத்தீவில் பெரியது – மினிக்காய்
- உயர்நீதிமன்றம் – எர்ணாக்குளம் (கேரளா)
இந்தியாவில் உள்ள பிற தீவுகள்
- தமிழ்நாடு -பாம்பன் தீவு
- கேரளா வெலிங்டன் தீவு
- ஆந்திரா-ஸ்ரீஹரிகோட்டா
- டையூ பாமன் – யூனியன் பிரதேசம்
- ஒரிசா -வீலர் தீவு (ராக்கெட் ஏவுதளம்)
- சதீஸ்தவான் செயற்கைகோள் ஏவுதளம்
- அஸ்ஸாம்-மஜிலி தீவு (நன்னீர் தீவு)
- பிரம்மபுத்திரா ஆறு