- வடிகாலமைப்பு என்பது முதன்மையாறுகளும் துணையாறுகளும் ஒன்றினைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ. எரிகளிலோ சேர்க்கும் செயலாகும்.
- முதன்மையாறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால் கொப்பாரை என அழைக்கப்படுகிறது.
- இந்தியாவின் வடிகாலமைப்பு 2 வகைப்படும்
1. இமயமலையில் தோன்றும் ஆறுகள் – சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா
2. தீபகற்ப ஆறுகள் – மகாநதி, கோதவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை, தபதி
- இந்தியாவில் 90% ஆறுகள் வங்கக் கடலிலும், மீதமுள்ள ஆறுகள் அரபிக்கடலிலும் கலக்கிறது.
இமயமலையில் தோன்றும் ஆறுகள்
- வடக்கே உள்ள இமயமலையில் இந்த ஆறுகள் உற்பத்தியாவதால் இமயமலை ஆறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள் ஆகும்.
சிந்து

- மொத்த நீளம் -2850 கி.மீ (இந்தியாவில் 709 கி.மீ மட்டும்)
- பாயும் பரப்பு – 1165500 ச.கி.மீ (இந்தியாவில் 321289 ச.கி.மீ)
- மேற்கு தீபெத்தில் உள்ள கைலாஷ் மலைத்தொடரின் சரிவில் மானசரோவர் ஏரிக்கு அருகில் 5150 மீ உயரத்தில் உற்பத்தியாகிறது.
- லடாக், ஜாஸ்கர் மலைத்தொடர்கள் வழியாக பாய்கிறது. பின் ஜம்மு காஷ்மீர் வழியாக பாய்ந்து பின் தென்புறமாக பாகிஸ்தானின் சில்லார் பகுதியில் நுழைந்து பின் அரபிக்கடலில் கலக்கிறது.
- இந்தியாவின் நைல் என அழைக்கப்படுகிறது.
- இந்தியா. திபெத் பாகிஸ்தான் வழியாக பாய்கிறது.
- சிந்து நதியின் துணையாறுகள் ஜீலம், சினாப், ராவி, சட்லெஜ், பியாஸ்
- சிந்துநதியின் மிகப்பெரிய துணையாறு – சினாப்
கங்கை
- நீளம் -2525 கி.மீ
- பாயும் பரப்பு -8.61,404 ச.கி.மீ
- கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 7010 மீ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து, பாகிரதி என்ற பெயருடன் உற்பத்தியாகிறது.
- இந்தியாவின் நீளமான நதி – கங்கை
- கங்கை சமவெளியை அடையும் இடம் ஹரித்துவார்.
- கங்கையின் துணையாறுகளான அலக்நந்தா, பாகிரதி, கங்கையுடன் இணையும் இடம் தேவப்பிரயாகே
- கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடம் – அலகாபாத்
- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் நகரங்கள் அலகபாத். ஹரிதுவார். உஜன், நாசிக்
- கங்கை மேற்கு வங்கத்தில் ஹிக்ளி, பாகிரதி என்ற பெரிலும் வங்களாதேசத்தில் பத்மா, மேனகா என்ற பெயரிலும் பாய்கிறது.
- உலகின் மிகப்பெரிய டெல்டா சமவெளி – கங்கை சமவெளி.
- உலகின் மிகப்பெரிய மக்கள் நெருக்கம் மிகுந்த சமவெளி
- உத்திரகாண்ட், உத்திரபிரதேஷ், பீகார். ஜார்கண்ட், மத்திய பிரதேஷ், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்கிறது.
- கங்கை சமவெளியின் பெரும்பகுதி வங்களாதேசத்தில் உள்ளது.
- வங்கதேசத்தில், கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
- பிரம்மபுத்திராவுடன் இணைந்து கழிமுகத்தில் சுந்தரவன காடுகளை உருவாக்குகிறது.
- வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா. கண்டாக், கோசி தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் கலக்கின்றன.
பீகாரின் துயரம் -கோசி
வங்கத்தின் துயரம் தாமோதர்
- கங்கையின் கிளைநதியான ஹீக்ளியில் இந்தியாவிலேயே மிக அதிக அளவு உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து நடைபெறுகிறது.
- கல்கத்தா துறைமுகத்தை கடலோடு இணைப்பது ஹிக்ளி நதி
- கங்கை கடலில் கலக்குமிடம் வங்காள விரிகுடா
- முக்கிய நகரங்கள்
அலகாபாத் வாரணாசி (காசி)
கான்பூர் பாட்னா
பிரம்மபுத்திரா
- நீளம் 2900 கி.மீ இதில் 900 கி.மீ. மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
- திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் சுமார் 5150 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகிறது.
- இதன் மொத்த பாயும் பரப்பு 5.80,000 ச.கி.மீட்டர்
இந்தியாவில் பாயும் பரப்பு 1.94,413 ச.கி.மீ ஆகும்.
- திபெத் பகுதியில் சாங்போ (தூய்மை) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
- பிரம்மபுத்திரா ஆறு அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது
- திஸ்டா, மனாஸ். பராக், சுபன்ஸ்ரீ ஆகியவை இவ்வாற்றின் சில முக்கிய துணையாறுகளாகும்.
- வங்களாதேசத்தில் ஜமுனா எனவும் கங்கை ஆற்றுடன் இணைந்த போது மேக்னா எனவும் அழைக்கப்படுகிறது.
யமுனை

- நீளம் – 1370 கி.மீ
- உற்பத்தியாகும் இடம் – யமுனோத்ரி
- கங்கையின் மிகப்பெரிய துணையாறு
- துணையாறுகள் ரிஷி கங்கா, ஹனுமன் கங்கா, உமா சாம்பல், கென் பெட்வா
- நகரங்கள் டெல்லி, ஆக்ரா மதுரா (கிருஷ்ணர் பிறந்த இடம்) மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலயம்.
சாம்பல்
- விந்திய மலையில் மகவ் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது.
- ராஜஸ்தான் வழியாக பாய்கிறது.
கோசி
- நேபாளத்தில் உள்ள சப்த கோசி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது.
- கங்கையில் கலக்கும் முன் பீகாரில் பெரும் வெள்ள சேதத்தை உண்டாகிறது.
தாமோதர்
- சோட்டா நாக்பூர் பீடபூமியின் டாரு சிகரத்தில் உற்பத்தியாகிறது.
- பின் ஹீக்ளியில் கலக்கிறது.
- துணையாறுகள் – கோனார். ஜமுனியா, பராக்கர்
தீபகற்ப இந்திய ஆறுகள்
- தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன. பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன. ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும். இவை பருவகால
- தீபகற்ப ஆறுகளை அவைபாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவை
1) கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
2) மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
மகாநதி
- சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகிறது.
- ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 851 கி.மீ நீளம் பாய்கிறது.
- துணையாறுகள் – சீநாத், டெலன், சந்தூர், சித்ரட்லா, கெங்குட்டி நன்.
கோதாவரி (விருத்தகங்கா)
- தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான நதி
- நீளம் -1465 கி.மீ
- பரப்பளவு – 3.13 இலட்சம் ச.கி.மீ
- உற்பத்தியாகும் இடம் – மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை.
- தென்னகத்து கங்கை (தட்சின கங்கோத்ரி) என அழைக்கப்படுகிறது.
- மகாராஷ்டிரா, ஆந்திரா வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது.
- துணையாறுகள் – பூர்ணா, பென்கங்கா, பிரனிதா, இந்திராவதி, தால், சலாமி
- இராஜமுந்திரிக்குஅருகில் கவுதமி மற்றும் வசிஸ்தா என இரு கிளைகளாக பிரிந்து மிகப்பெரிய டெல்டாவை உருவாக்குகிறது.
- கோதாவரி, டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேரு ஏரி அமைந்துள்ளது.
கிருஷ்ணா

நீளம் -1400 கி. மீ
- பரப்பு – 258 இலட்சம் கி.மீ
- உற்பத்தியாகும் இடம் – மகாராஷ்டிராவின் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாபலேஷ்வர் மலை
- தீபகற்ப இந்தியாவின் 2 வது பெரிய ஆறு
- துணையாறுகள்- கொய்னா, பீமா, முசி(ஹைதராபாத்), துங்கபத்ரா, பெடவாறு
- இந்நதி ஆந்திரபிரதேசத்தின் வழியாக பாய்ந்து ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
- கொய்னா நீர்மின் திட்டம் மகாராஷ்டிரா
காவேரி
- நீளம் -800 கி.மீ
- உற்பத்தியாகும் இடம் – கர்நாடக மாநிலத்தின் குடகு மலையிலுள்ள தலைகாவேரி
- தென்னிந்தியாவின் கங்கை என அழைக்கப்படுகிறது.
- தென்மேற்கு, வடகிழக்கு பருவக்காற்றால் மழை பெறுகிறது.
- துணையாறுகள் – ஹரங்கி, ஹேமாவதி, கபினி, பவானி, அர்காவதி, நொய்யல், அமராவதி.
- கர்நாடகாவில் இரண்டாக பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் போன்ற ஆற்றுத் தீவுகளை உருவாக்கிறது.
- தமிழ்நாட்டின் ஆற்று தீவு – ஸ்ரீரங்கம்.
- காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் அமைந்த நீர்வீழ்ச்சி ஜோக் (அ) சிவசமுத்திரம் (அ)
செரசப்பா நீர்வீழ்ச்சி
தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சி -ஒகேனக்கல்.
- கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 12 அணைகளில் மிகப்பெரியது –
கிருஷ்ணராஜ சாகர் அணை (கண்ணம்பாடி)
- தமிழ்நாட்டில் உள்ள அணைக்கட்டு -ஸ்டான்லி நீர்த்தேக்கம் (மேட்டூர்) 124 அடி உயரம்.
- காவிரி நீரை அளவிடும் இடம் – பிலிகுண்டு
- காவிரி தமிழ்நாட்டில் நுழையும் இடம் – ஒகேனக்கல்
- காவிரி திருச்சிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே இளமனூர் என்றுமிடத்தில் இரண்டாக பிரிகிறது.
இதன் வடபிரிவு கொள்ளிடம் எனவும்.
தென்பிரிவு காவிரி எனவும் அழைக்கப்படுகிறது.
- இறுதியில் பூம்புகார் என்ற இடத்திற்கு அருகில் வங்கக் கடலில் கலக்கிறது.
- கல்லணை -காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட மற்றொரு அணை
- உலகின் மிகப்பழமையான நீர் மேலாண்மைத் திட்டம்
- கல்லணையின் நோக்கம்- கால்வாயின் மூலம் நீரை பிரித்து தருதல்.
- காவிரியுடன் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி
காவிரியின் பாசனப் பரப்பு 81156 ச.கி.மீ
கர்நாடக பாசனப் பரப்பு 34273 ச.கி.மீ
தமிழ்நாடு பாசனப் பரப்பு
438098 ச.கி.மீ
கேரளா பாசனப் பரப்பு 2866 ச.கி.மீ
பாண்டிச்சேரி பாசனப் பரப்பு 148 ச.கி.மீ
தென்பெண்ணை
- கர்நாடக மாநிலம் சென்னகேசவ மலையில் உற்பத்தியாகி தமிழ்நாடு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.
- இதன் குறுக்கே உள்ள அணை – சாத்தனூர் அணை (திருவண்ணாமலை)
பவானி
- நீளம் 210 கி.மீ
- உற்பத்தி – அமைதி பள்ளத்தாக்கு
- மேட்டுப்பாளையத்தில் சமவெளியை அடைகிறது. இதன் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது.
- பவானி காவிரியுடன் கலக்கும் இடம் – கூடுதுறை (சங்கமேஸ்வரர் கோவில்)
பாலாறு
- மணல் ஆறு என அழைக்கப்படுகிறது.
- உற்பத்தி – கர்நாடக மாநிலம் நந்தி மலை.
- தமிழ்நாட்டின் வழியே பாய்ந்து சென்னைக்கு அருகில் சதுரங்கபட்டினத்தில் கடலில் கலக்கிறது.
- இதன் துணையாறுகள் – செய்யாறு, மேகவதி.
வைகை

- மதுரை மாவட்டம் கண்டமநாயக்கனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைசரிவில் உற்பத்தியாகிறது.
- வைகை அணை தேனீ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- பாக் ஜலசந்தியில் கடலில் கலக்கிறது.
- துணையாறுகள்: வைணவ ஆறு, சுருளி ஆறு, வராக நதி, மஞ்சள் ஆறு.
தாமிரபரணி
- உற்பத்தி – அகத்தியர் மலை.
- தென்பாண்டி நாட்டின் நன்கொடை என அழைக்கப்படுகிறது.
- வேறுபெயர்கள் – பெருநை, பொருனல், தன்பொருரை, தன்பொருத்தம்.
- தென்மேற்கு, வடகிழக்கு பருவக்காற்றால் மழை பெறுகிறது.
- வற்றாத ஜீவ நதியாக உள்ளது.
இவ்வாற்றின் கட்டப்பட்டுள்ளது. குறுக்கே முண்டந்துறைக்கு அருகில் பாபநாசம் அணை
- குற்றாலச் சாரல் இவ்வாற்றிலேயே அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தென்னிந்தியாவின் ஸ்பா (மூலிகை தொகுதி) எனப்படுகிறது. σουπ.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
நர்மதை
நீளம் – 1312 கி. மீ
- பரப்பளவு – 98796 ச.கி.மீ
- உற்பத்தி – மத்திய பிரதேசத்தின் அமர்கண்டாக் பீடபூமி (1057 மீ உயரம்)
- மேற்கு நேக்கி பாயும் ஆறுகளில் மிகப் பெரியது.
- இது 27 கி.மீ நீளத்திற்கு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
- இதில் உள்ள முக்கிய அணை சர்தார் சரோவர்,
- நர்மதா பட்சன் அந்தோலன் இயக்கத் தலைவர் – மேதாபட்கர்.
- துணையாறுகள் : பர்னா. ஹலுன், ஹெரன், பஞ்சர், தூதி. சக்கார், டவா, கோலர்
தபதி
- உற்பத்தி – மத்திய பிரதேசத்தின் பெட்டூஸ் மாவட்டத்தில் 752 மீ உயரத்தில் முல்டாய் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது.
- நீளம் – 724 கி.மீ
- பரப்பு – 65145 ச.கி.மீ
- சாத்பூரா மலைக்கு தெற்கில் பாய்ந்து காம்பே வளைகுடாவில் அரபிக்கடலில் கலக்கிறது.
- துணையாறுகள்: வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ.பஞ்சரா.போரி.
- தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை, தபதி மற்றும் மாறி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன.
சபர்மதி
- ஆரவல்லி மலையில் உற்பத்தியாகி காம்பே வளைகுடாவில் கலக்கிறது.
செராவதி
- உற்பத்தி -மேற்கு தொடர்ச்சி மலை (சயாத்ரி மலை)
- இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி இவ்வாற்றிலேயே அமைந்துள்ளது.
- இந்தியாவின் உயர்ந்த நீர்வீழ்ச்சி:
- ஜோக் (அ) செரசப்பா (அ) மகாத்மா காந்தி நீர்வீழ்ச்சி
லூனி ஆறு (உப்பு ஆறு)
- ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே உள்நாட்டு வடிகால் அமைப்பு காணப்படுகிறது.
இப்பகுதியில் லூனி ஆறு ஓடுகிறது.
- லூனி ஆறு ஆஜ்மீருக்கு தென்மேற்கே ஆரவல்லி மலைதொடரில் உருவாகிறது.
- கோவிந்கார்க் என்னுமிடத்தை கடந்து சரஸ்வதி ஆற்றுடன் கலக்கிறது.
- சரஸ்வதி ஆறு உருவாகும் எரி – புஸ்கர் ஏரி.
- லூனி ஆற்றின் துணையாறுகள்: சுக்ரி நதி, ஜவ்வாய் நதி.
- லூனி ஆறு கட்ச் பகுதியில் ரானின் தலைப்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் மறைகிறது.
- லூனி ஆற்று நீர், பலோட்டிரா வரை சுவையாக இருப்பினும், ரான் ஆப் கட்ச் பகுதியில் உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.
துணை ஆறுகள்:
- ஒரு ஆறானது மலைப்பகுதியில் உருவாகி அதன் முதன்மை ஆற்றுடன் இணைவது.
உதாரணம்: கங்கையின் துணையாறு – யமுனை.
- கிளை ஆறுகள் : முதன்மை ஆறு பல கிளைகளாக பிரிந்து கடலில் கலப்பது.
உதாரணம்: ஹுக்ளி நதி
- டெல்டா:ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படும் முக்கோண வடிவ படிவுகள்.
- கழிமுகம் ஆற்றின் முகத்துவாரத்தில் நல்ல நீரும். உப்பு நீரும் ஒன்று கலக்கிறது. இப்பகுதி டெல்டா போல் இல்லாமல் ஆழமாக இருக்கும்.
உதாரணம்: நர்மதை ஆற்றின் கழிமுகப்பகுதி.
- இமயமலையில் உருவாகும் ஆறுகள் உருவாக்குகின்றன. வடிவ ஆழமான பள்ளதாக்குகளை
இந்தியாவின் காலநிலை
- வானிலை என்பது ஓரிடத்தின் வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம், மழைப்பொழிவு ஆகியவற்றின் அன்றாட நிலையை குறிப்பதாகும்.
- காலநிலை என்பது ஓரிடத்தின் 30-35 ஆண்டுகால வானிலையின் சராசரியை குறிப்பதாகும்.
- சமச்சீர் காலநிலை என்பது பிரிட்டிஷ் காலநிலை என அழைக்கப்படுகிறது.
இக்காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ தாகவோ அல்லது மிகக் குளிருடையதாகவோ இருக்காது.
2) உயரம்
- புவிப்பரப்பிலிருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீ உயரத்திற்கும் 6.5°C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது (165 மீ -1°C)
இதற்கு “வெப்ப குறைவு விகிதம்” (அ) இயல்பு வெப்ப வீழ்ச்சி என்று பெயர்.
- இதன் காரணமாக சமவெளிகளை காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கும்.
உதாரணம்: ஜூன் மாதத்தில் 239 மீ உயரத்தில் உள்ள புதுடெல்லியின் சராசரி @ມ່ນ = 40.2 C
2205 மீ உயரத்தில் உள்ள சிம்லாவின் வெப்பம் = 23.7 C
கடல் மட்டத்திலிருந்து சென்னையின் உயரம் 6.7மீ
கடல் மட்டத்திலிருந்து உதகையின் உயரம் 22408
3) கடலிலிருந்து தூரம்
- இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கே நிலவுவது – கண்டகாலநிலை.
- கோடைக்காலத்தில் அதிக வெப்பமாகவும், குளிர்காலத்தில் அதிக குளிராகவும் உள்ள காலநிலை – கண்ட காலநிலை.
- கடக ரேகைக்கு தெற்கில் அமைந்துள்ள இடங்கள் மேற்கில் அரபிக் கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளதால் மித வெப்ப மண்டல காலநிலை காணப்படுகிறது.
உதாரணம்1: கொச்சி கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் இதன் வருடாந்திர சராசரி
வெப்பம் = 30°C
கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள புதுடெல்லியின் வருடாந்திர சராசரி
வெப்பம் = 40 C
உதாரணம் 2 கடற்கரைக்கு அருகிலுள்ள கொல்கத்தாவின் மழைப்பொலிவு 119 செ.மீ இராஜஸ்தானின் பிகானிரில் மழைப்பொலிவு = 24 செ.மீ குறைவு,
4) பருவக்கால காற்று
- இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
- இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
- இந்தியாவில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் ஜூன் மாத மத்தியில் விழுகின்றபொழுதிலும் கோடைக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது.
ஏனெனில் தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது.
- கடல் பகுதியிலிருந்து நிலப்பகுதியினை நோக்கி காற்று வீசும் போது மிதமான வெப்பநிலையும், நிலப்பகுதிகளுக்குள்ளே வீசும்போது வறண்ட வெப்பநிலையும் பெறுகிறது.
உதாரணம்: மேற்கு காற்றுகள் மத்திய தரைக்கடலில் உருவாகி பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு நல்ல மழையைத் தருகிறது.
வெப்ப மண்டல புயல்காற்று, வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பெரும் சேதத்தை உண்டாக்குகிறது.
5) நிலத்தோற்றம், மலைகளின் அமைவு
- வட இந்தியாவில் உள்ள இமயமலைத்தொடர், மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவை நோக்கி வீசும் கடும்குளிர் காற்றை தடுத்து இந்தியாவை வெப்ப பகுதியாக வைத்திருக்கிறது.
இதனால் குளிர்காலத்திலும் வட இந்தியா வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது.
- தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுப்பகுதி கன மழையைப் பெறுகிறது. மாறாக மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழை மறைவுப் பகுதி அல்லது காற்று மோதாப்பக்கத்தில் அமைந்திருப்பதால் மிகக்குறைந்த அளவு மழையைப் பெறுகின்றன.
- தென்மேற்கு பருவகாற்று காலத்தில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மங்களூர் 280 செ.மீ மழைப்பொலிவையும், மலைமறைவுப் பகுதியில் அமைந்துள்ள பெங்களூரு 50 செ.மீ மழைப்பொழிவையும் பெறுகின்றது.
- எல்நினோ விளைவு என்பது 5 முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை காணப்படும் வானிலை நிகழ்வு.
இது இந்தியாவின் தென்மேற்கு பருவக்காற்று வீச ஆரம்பிப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.
ஜெட் காற்றோட்டம்.
- வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ஜெட் காற்றுகள் என்கிறோம்.
- ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின்படி, உப அயன மேலை காற்றோட்டம். வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.
- கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில், வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
பருவக்காலம்
- மான்சூன் என்ற சொல் மௌசிம் என்ற அரேபிய சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவக்காலம் என்பதாகும்.
- பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப்பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
- இக்காற்று கோடைக்காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கியும். குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் வீசுகிறது.
- பருவக்காற்று மாற்றத்தின் பருவங்களாக பிரிக்கலாம். அடிப்படையில் இந்தியாவின் காலநிலையை 4
1) குளிர்காலம்
- டிசம்பர் முதல் பிப்ரவரி வரை (NewBook: ஜனவரி முதல் பிப்ரவரி வரை)
2) கோடைக்காலம்
மார்ச் முதல் மே வரை
3) தென்மேற்கு பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை
காலம்
4) வடகிழக்கு பருவகாற்று அக்டோபர் முதல் நவம்பர் வரை
1) குளிர்காலம்

- குளிர்காலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் மகர ரேகையில் விழுகிறது.
- இதனால் வட இந்தியாவில் நிலப்பகுதி மிகவும் குளிர்ந்து, பகல், இரவு நேர வெப்பநிலையில் வேறுபாடு இல்லாமல் 21 C ஆக காணப்படுகிறது.
- ஒரு நாளின் குறைந்தபட்ச சராசரி வெப்ப நிலையானது தென்னிந்தியாவில் 22 C லிருந்து வடக்கு சமவெளிகளில் 10 C ஆகவும், பஞ்சாப் சமவெளியில் 6 C ஆகவும் உள்ளது.
- இச்சமயத்தில் வடமேற்கு பகுதியில் உண்டான உயர் அழுத்தம். குறைந்த அழுத்தமுள்ள தென் இந்தியாவை நோக்கி வீசுகிறது. இந்த காற்றிற்கு பின்னடையும் பருவக்காற்று என்று பெயர்.
- பின்னடையும் பருவகாற்றின் சிறப்பு, இக்காற்று வங்காள விரிகுடாவை கடக்கும்போது ஈரப்பதத்தை பெறுவதால், தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திரப்பிரதேசத்திற்கும் குளிர்கால மழையை தருகிறது.
- நாகப்பட்டினம் பெறும் 140 செ.மீ மழைப்பொழிவில் 100 செ.மீ மழை குளிர்காலத்தில் பெறுகிறது.
- குளிர்கால மழையானது கடற்கரையில் அதிகமாகவும், உள்நாட்டில் குறைவாகவம் பெய்கிறது.
உதாரணம்: மைசூர் பீடபூமி 3-4 செ.மீ மழை.
- இக்காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் மேற்கத்திய இடையூறு தாழ்வழுத்தங்கள். வட இந்தியாவில் மழையைத் தருகின்றன. இக்காற்றை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஜெட் காற்றோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- இக்காற்றானது பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசத்தில் மழைப்பொழிவையும். ஜம்மு காஷ்மீரின் மலைப் பகுதிகளில் பனிப்பொழிவையும் தருகிறது.
- இம்மழை குளிர்கால கோதுமை பயிரிடலுக்கு மிகவும் பயனளிக்கிறது.
- இப்பருவத்தில் தென்னிந்தியாவில் காற்றின் திசையானது கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது.
- சராசரி வெப்ப நிலையானது வடக்கிலிருந்து தெற்காக அதிகரிக்கிறது.
- நாட்டின் வடமேற்கு பகுதியில், வடக்கு நோக்கி செல்லும் போது வெப்பம் கனிசமாக குறைகிறது.
2) கோடைக்காலம் (அ) முன்பருவக்காற்றுக் காலம்
- கோடைக்காலத்தின் போது சூரியனின் செங்குத்து கதிர்கள் கடகரேசையின் மீது விழுவதால், வெப்பநிலை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிகரிக்கிறது.
- வடமேற்கு இந்தியாவின் பகல்நேர வெப்பநிலை 45 வேரை உயர்கிறது.
தென்னிந்தியாவில் அப்போது மிதமான காலநிலையே காணப்படுகிறது (30-35 C)
இதனால் வெப்பநிலை வேறுபாடு உண்டாகிறது.
- வளிமண்டல அழுத்த நிலையின் காரணமாக காற்றானது தென்மேற்கிலிருந்து வடகிழக்காக அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் வீசுகிறது.
- இதுவே மே மாதத்தில் மேற்குகடற்கரை பகுதிகளுக்கு முன்பருவ மழையைத் தருகிறது.
- கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் விளையும் மாங்காய்கள் முதிர்வதற்கு உதவும் மழை – மாஞ்சாரல்
- ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையில் இருந்து, வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று – நார்வெஸ்டர்
இத்தலக்காற்று பஞ்சாபில் கால்பைசாகி எனப்படுகிறது.
இக்காற்று கிழக்கு (ம) வடகிழக்கு பகுதிகளான பீகார். மேற்கு வங்கம். அசாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது.
- இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைக்காலத்தில் பகல்நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக் காற்று லூ எனப்படுகிறது.
3) தென்மேற்கு பருவக்காற்று (அ) மழைக்காலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை)
- கோடைக்காலத்திற்கு பின் தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்துடன் மழைக்காலம் தொடங்குகிறது.
- மே மாத இறுதிக்குள் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அதிக வெப்பம் காரணமாக தாழ்வழுத்தம் உண்டாகிறது.
- அச்சமயம் பெருங்கடல்கள் குளிர்வடைவதால், அங்கு உயர் அழுத்தம் உண்டாகிறது.
எனவே காற்று உயர் அழுத்த கடல் பகுதியில் இருந்து தாழ்வழுத்த நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.
- இக்காற்றையே தென்மேற்கு பருவக்காற்று என்று அழைக்கிறோம்.
- இக்காற்று பூமத்தியரேகையை கடக்கும் போது அதன் திசை மாற்றப்பட்டு தென்மேற்கு பருவக்காற்றாக வீசுகிறது.
- தென்மேற்கு பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கனக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும், ஜூலை 15 இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
- இந்தியாவின் 75% மழைபொழிவிற்கு தென்மேற்கு பருவக்காற்றே காரணம்.
- உலகளாவிய காலநிலை நிகழ்வான “எல்நினோ” தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வெப்பநிலையானது 46 c வரை உயருகிறது. இந்தியாவின்
- இந்த காற்று கேரளாவின் தென்பகுதியை அடையும்போது இடி மின்னலுடன் கன மழையைத் தருகிறது.
இதனை பருவமழை வெடிப்பு எனக் கூறுவர்.
- தென்மேற்கு பருவக்காற்று இந்திய தீபகற்ப அமைப்பால் இரு கிளைகளாக பிரிகிறது.
1. அரபிக்கடல் கிளை
2. வங்காளவிரிகுடா கிளை
1. அரபிக்கடல் கிளை
- பருவகாற்றின் அரபிக்கடல் கிளை, ஒரு வலிமை மிக்க அதிக மழைப்பொழிவை தரும் காற்று ஆகும்.
- அரபிக்கடலில் உருவாகும் ஈரப்பதம் மிக்க காற்று, மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளின் வழியே உயரே எழும்பி குளிர்வடைந்து மேற்கு கடற்கரை பகுதிக்கு பலத்த மழையைத் தருகிறது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மோதும் திசையில் அமைந்துள்ள மும்பை 150 செ.மீ மழையும் எதிர்புறம் உள்ள பூனா 50 செ.மீ மழையும் பெறுகிறது.
- அரபிக்கடல் கிளையின் இரண்டாவது பகுதி விந்திய சாத்பூரா மலைகளின் வழியே சென்று இராஜ்மகால் குன்றுகளின் மீது மோதி சோட்டா நாக்புர் பூடபூமிக்கு அதிக மழையை தருகிறது.
- அரபிக்கடல் கிளையின் மூன்றாவது பகுதி ராஜஸ்தானை நோக்கி வீசுகிறது.
- ராஜஸ்தானில் ஆரவல்லி மலைத்தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக இருப்பதால், மேற்கு இராஜஸ்தானின் ஒரு பகுதி பாலைவனமாக அமைந்துள்ளது.
- இவை இமயமலையின் சிவாலிக் குன்றுகளால் தடுக்கப்படுவதால் மலையடிவாரத்தில் நல்ல மழையை தருகின்றது.
- அரபிக்கடல் கிளை இமாச்சல பிரதேசத்தை அடையும் போது வங்காள விரிகுடா கிளையுடன் கலந்து விடுகிறது.
2. வங்காள விரிகுடா கிளை
- வங்காள விரிகுடா கிளை வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.
- வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் ஈரப்பதம் மிக்க காற்றானது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளின் மீது மோதுகின்றது.
- இக்காற்று புனல்வடிவ குன்றுகளின் மீது மோதி திடீரென மேல் எழுவதால் இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதியான மௌன்சின்ராமிற்கு (1141 செ.மீ) அதிக கனமழையை தருகிறது.
- இக்காற்றின் ஒரு பகுதி இமயமலையால் தடுக்கப்பட்டு, மேற்கு நோக்கி நகர்ந்து, கங்கை சமவெளிக்கு அதிக மழையை தருகிறது.
- மேற்கு நோக்கி நகர நகர தன்னிடமுள்ள ஈரப்பதத்தை இழப்பதனால், பஞ்சாப், ஹரியானா பகுதிக்கு குறைந்த அளவு மழையையே தருகிறது.
- இறுதியாக அரபிக்கடல் கிளையுடன் இணைந்து சிவாலிக் குன்று பகுதிகளில் அதிக மழையை தருகின்றது.
- தென்மேற்கு பருவகாற்றின் போது தமிழகம் குறைவான மழைபெற காரணம்.
அரபிக்கடல் கிளை காற்றுக்கு, மழை மறைவு பகுதியாக உள்ளது
வங்காள விரிகுடா கிளை காற்றுக்கு இணையாக உள்ளது.
4) வடகிழக்கு பருவ காற்று (அ) பின்னடையும் பருவகாற்று காலம்
- சூரியன் மகர ரேகையை நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று வட இந்தியாவில் இருந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறது.
- அச்சமயம் இந்திய நிலப்பகுதி வெப்பத்தை இழந்தாலும், கடலின் வெப்பம் இன்னும் மிதமாகவே உள்ளது.
- தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியில் உள்ள உயர் அழுத்த பகுதியில் இருந்து, தாழ் அழுத்த பகுதி வங்காள விரிகுடா நோக்கி வீசுகிறது.
- அப்போது பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் காரணமாக (கொரியாலிஸ் விசை காரணமாக) காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது.
- எனவே இக்காற்று வடகிழக்கு பருவகாற்று என அழைக்கப்படுகிறது.
- எனவே குளிர்காலத்தில் தமிழகமும், ஆந்திர, கேரளா மற்றும் தென்கர்நடகாவின் உட்பகுதிகள் நல்ல மழையை பெறுகின்றன.
- இப்பகுதிகள் மொத்த மழை பொழிவில் சுமார் 35% பெறுகின்றன.
- இச்சமயத்தில் வங்காள விரிகுடாவில் அடிக்கடி புயல்கள் உருவாகி பெரும் சேதத்தை உண்டாக்குகின்றன.
- இப்பருவத்தில் நாடு முழுவதும் பகல் நேர வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.
பருவக்காற்றின் தன்மைகள்
- பருவக்காற்று வீசும் காலம் 2 முதல் 4 மாதம் வரை வேறுபடும்.
- மலைகளின் அமைப்பு காரணமாக ஷில்லாங் பீடபூமி ஆண்டுக்கு 1270 செ.மீ மழையையும், அஸ்ஸாம் பள்ளத்தாக்கின் மத்திய பகுதி 163. 7 செ.மீ மழையையும் பெறுகின்றன.
- வெப்ப மண்டல குறை அழுத்தங்கள் மழை அளவை தீர்மானிக்கின்றன.
- ஜூன் முதல் செப்டம்பர் வரை வங்காள விரிகுடாவில் 8 வெப்ப மண்டல குறை அழுத்தங்கள் உண்டாகின்றன.
- ஒரு ஆண்டின் மழைப்பொழிவு சராசரியாக 1187 செமீ முதல் 25 செ.மீ வரை மாறுபடும்.
- உலகில் அதிக மழை பெறும் பகுதி – மௌன்சின்ராம் (1141 செ.மீ)
- இந்தியாவில் குறைவான மழை பெறும் பகுதி – தார்பாலைவனம் (25 செ.மீ க்கும் குறைவாக)
- பூமியின் மிக வறண்ட பகுதி – அடகாமா பாலைவனம்
- நாட்டின் மொத்த பரப்பில்
11% 200 செ.மீ அதிகமான மழைப்பொலிவு
21% 125- 200 செ.மீ மழைப்பொலிவு
37% 75 – 125 செ.மீ மழைப்பொலிவு
24% 35 – 75 செ.மீ மழைப்பொலிவு
7% 35 செ.மீ குறைவான மழைப்பொலிவு
- இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு 118 செ.மீ
- இந்தியாவில் 200 செ.மீ க்கும் அதிகமாக மழைபொழிவும் மாநிலங்கள்
அஸ்ஸம்.
திரிபுரா,
மேகாலயாவின் தென்பகுதி.
மேற்கு கடற்கரை,
நாகலாந்து,
அருணாச்சலப்பிரதேசம்.
- 100 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவை பெரும் மாநிலங்கள்.
பஞ்சாப்
ஹரியானா
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும்
உத்திரபிரதேசத்தின் மேற்கு (ம) தென்மேற்கு பகுதிகள்
மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதி
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி
தக்காண பீடபூமி
- மற்ற பகுதிகள் 100 முதல் 200 செ.மீ மழைப்பொழிவை பெறுகின்றன.