- கோண்டுவானா நிலப்பரப்பில் இந்தியா அமைந்துள்ளது.

- ஆசிய நிலவியல் தட்டுக்கள். ஐரோப்பிய நிலவியல் தட்டுகளுடன் மோதியதால் டெப்தீஸ் கடல் மூடப்பட்டு, தென் ஆசியாவில் இமயமலையும், ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலையும், மேற்கு ஆசியாவில் காக்கஸ் மலையும் தோன்றியது.
- ஒரு கண்டத்திற்கு உரிய அனைத்து பண்புகளையும் இந்தியா பெற்றுள்ளது.
- பாகிஸ்தான், மியான்மர், வங்களாதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
- இந்தியா ஆசியா கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
- பரதன் ஆட்சி செய்ததால் பாரதம் எனவும்.
- சிந்துநதி பாய்வதால் ஹிந்துஸ்தான் எனவும் அழைக்கப்படுகிறது.
- பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் சிந்து என்ற சொல்லின் அடிப்படையில் இந்தியா என பெயரிட்டனர்.
- இந்தியாவின் பரப்பளவு -3287263 ச.கி.மீ
- உலக பரப்பில் 7 வது இடத்தைப் (2.4%) பெற்றுள்ளது.
- இந்தியா பாகிஸ்தானை விட 4 மடங்கு பெரியது.
- இந்தியா ஜப்பானை விட 8 மடங்கு பெரியது.
- இந்தியா இங்கிலாந்தை விட 12 மடங்கு பெரியது.
- ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளை விட 3 மடங்கு சிறியது.
- 2011 ல் இந்திய மக்கள் தொகை – 1210 மில்லியன் (121 கோடி)
- உலக மக்கள் தொகையில் – 17%
- இந்தியாவின் மேற்கில் அரேபிய தீபகற்பமும். கிழக்கில் இந்தோனேசிய தீபகற்பமும் அமைந்துள்ளது.
- இந்தியாவுடன் நில எல்லை கொண்ட நாடுகள் (15200 கி.மீ)
மேற்கு – பாகிஸ்தான்
வட மேற்கு – ஆப்கானிஸ்தான்
கிழக்கு – வங்காளதேசம், மியான்மர்
வட கிழக்கு – நேபாளம், பூடான், சீனா
நீர் எல்லை

தென்கிழக்கு – ஸ்ரீலங்கா
மேற்கு – மாலத்தீவு
- இந்தியாவுடன் அதிக எல்லை கொண்ட நாடு – வங்காளதேசம் (4156 கி.மீ) ()
- குறைந்த எல்லை கொண்ட நாடு ஆப்கானிஸ்தான் (106 கி.மீ)
- இந்தியாவின் கிழக்கே உள்ள அரக்கோயாமா மலைத்தொடர் இந்தியாவை மியான்மரில் இருந்து பிரிக்கிறது.
- இந்தியாவையையும், இலங்கையையும் பிரிப்பது பாக் நீர்ச்சந்தி
- நேபாளத்தையும், இந்தியாவையும் பிரிக்கும் இந்திய மாநிலங்கள் சிக்கிம், மேற்குவங்கம்.
- இந்தியாவின் தென்கோடி முனை – இந்திரா முனை (அ) பிக்மெலியன் முனை இந்திரா முனை 6 45 வட அட்சத்தில் அந்தமான் நிகோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்தள்ளது.
- இந்திய நிலப்பகுதியின் தென் கோடி முனை – குமரி முனை
- இந்தியாவின் வடமுனை இந்திரா கோல்
- இது ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது
இந்தியாவின் பரவல்
- இந்தியா 8 4 வட அட்சம் முதல் 37 6 வட அட்சம் வரை 68 7 கிழக்கு தீர்க்கம் முதல் 97 25 கிழக்கு தீர்க்கம் வரை பரவியுள்ளது.
- அட்சக் கோடுகளும், தீர்க்க கோடுகளும் ஓர் இடத்தின் அமைவிடத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன.
- அட்ச தீர்க்க பரவல்படி இந்தியா முழுமையும் வடகிழக்கு அரைக்கோளத்தில் அமைந்தள்ளது.
- 23 % வடக்கு அட்சமான கடகரேகை இந்தியாவை இரண்டாக பிரிக்கிறது.
வடக்கு – மித வெப்ப மண்டலம்
தெற்கு – வெப்ப மண்டலம்
- கடகரோகை வழியாக செல்லும் இந்திய மாநிலங்கள்
- குஜராத், ராஜஸ்தான். மத்திய பிரதேஷ். சட்டீஸ்கர். ஜார்கண்ட், மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரம்.
- குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை இந்தியா ஏறத்தாழ 30 தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது.
- புவியானது 24 மணி நேரத்தில் 360 தீர்க்க கோடுகளை கடக்கிறது.
1 தீர்க்க கோட்டை கடக்க ஆகும் நேரம் 4 நிமிடம்
- இந்தியாவின் மேற்கே உள்ள குஜராத் மாநிலத்திற்கும் (68 7கி) கிழக்கே உள்ள அருணாச்சலபிரதேச மாநிலத்திற்கும் (97 25 ) இடையே உள்ள
இந்த இரண்டு பகுதிகளுக்கும் உள்ள தல நேர வேறுபாடு -29.18 4 நிமிடம் =1 மணி 57 நிமிடம் 12 வினாடிகள் (தோராயமாக 2 மணி நேரம்)
- இந்தியாவின் திட்ட நேரம் மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்லும் 82 (82 30) கிழக்கு தீர்க்க ரேகை
இந்திய திட்ட நேரமானது கிரீன்வீச் சராசரி நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக இருக்கும்.
- 82 1/2 தீர்க்கரேகை வழியே செல்லும் மாநிலங்கள் உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ஒரிஷா, ஆந்திர பிரதேஷ்
- 1947 ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்குபின் இந்திய அரசு இந்திய திட்ட நேரத்தை அலுவலக திட்ட நேரமாக பயன்படுத்தி வருகிறது.
- இந்தியாவின் கிழக்கு மேற்கு நீளம் – 2933 கி.மீ
கிழக்கே அருணாச்சல பிரதேசம் முதல் மேற்கே குஜராத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் வரை
- இந்தியாவின் வடக்கு தெற்கு நீளம் – 3214 கி.மீ
வடக்கே காஷ்மீரில் உள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை
- அந்தமான் நிக்கோபர். இலட்சத் தீவை தவிர்த்து இந்தியக் கடற்கரையின் நீளம் 6100 .கி. மீ
தீவுக்கூட்டங்களை சேர்த்து – 7516 கிமீ
- நீண்ட கடற்கரை கொண்ட மாநிலம் – குஜராத்
நீண்ட கடற்கரை கொண்ட 2 வது மாநிலம் – ஆந்திரா
ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் – அமராவதி நகர்.
ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் படி 2024 வரை ஐதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கான மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.
- அதிக மாநிலங்களுடன் உத்திரபிரதேஷ் (8 மாநிலம்) எல்லையை பகிர்ந்து கொண்ட மாநிலம்
- இந்தியாவின் மொத்த தீவுகள் 247
- இதில் வங்காள விரிகுடாவில் 204 ம், அரபிக்கடலில் 43 ம் உள்ளன.
- இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் – K, (காட்வின் ஆஸ்டின்)
தாழ்ந்த பகுதி – மலபார் கடற்கரை சமவெளி
- இந்தியாவில் அதிக மழைபெறும் பகுதி – சிரபுஞ்சி (மேகாலயா) மௌன்சின்ராம்
- குறைந்த மழைபெறும் பகுதி – தார் பாலைவனம் (ராஜஸ்தான்)
- இந்தியாவில் அடர்ந்த வெப்பமண்டல காடுகள் காணப்படும் இடம் -மேற்கு தொடர்ச்சி மலை.
- மாங்கோராவ் மரங்கள் கொண்ட சுந்தரவன காடுகள் காணப்படும் இடம் -மேற்கு வங்கம்.
- உலகிலுள்ள மிக இளைய நிலத்தோற்றம் – தீபகற்ப பீடபூமி
- இந்தியாவின் வடபகுதியை புறதீபகற்பம் எனவும், தென்பகுதி தீபகற்பம் என்றும் அழைக்கின்றோம்.
வடகிழக்கு மாநிலங்கள்
- அஸ்ஸாம், அருணாசல பிரதேஷ். மேகாலயா, நாகாலந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா.
- இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளுடன் சூயஸ் கால்வாய் வழியாகவும், சீனா, ஜப்பான். ஆஸ்திரேலிய நாடுகளுடன் மலாக்கா நீர்ச்சந்தி வழியாகவும் வணிகம் மேற்கொண்டனர்.
- இந்திய நிலப்பரப்பில்
சமவெளி 43%
மலைகள் 29.3%
பீடபூமி 27.7%
- இந்தியாவின் இயற்கையமைப்பை நிலத்தோற்றங்களின் அடிப்படையில் 6 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. இமயமலைகள் (வடக்கு மலைகள்)
2. வட இந்திய பெரும் சமவெளிகள்
3. தீபகற்ப பீடபூமி
4. கடற்கரைச் சமவெளிகள்
5. இந்தியப் பாலைவனம்
6. தீவுகள்
புற தீபகற்ப மலைகள்
1. இமயமலை (வடக்கு மலைகள்)

- இமாலயா என்ற சொல் சமஸ்கிருத மொழியில் பனி உறைவிடம் என அழைக்கப்படுகிறது.
- இமயமலையின் உயர்ந்த சரிவுப் பகுதிகளில் நிரந்தரமாக பனியால் மூடியுள்ளதால் பனி உறைவிடம் என அழைக்கப்படுகிறது.
- உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத்தொடர்
- இமயமலைகள் வில் போன்ற வடிவத்தில் 2500 கி.மீ நீளத்திற்கு நீண்டு காணப்படுகிறது.
- மேற்கே ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து பள்ளதாக்கில் தொடங்கி, கிழக்கே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை நீண்டு செல்கின்றது.
- இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கி.மீ அகலத்துடனும், அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கி.மீ அகலத்துடனும் வேறுபடுகிறது.
- உலகின் கூரை எனப்படும் பாமீர் முடிச்சு மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும், இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது.
- இமயமலை பாமீர் முடிச்சிலிருந்து கீழ்நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்தள்ளது.
- உலகின் 14 கொண்டுள்ளது. உயரமான சிகரங்களில் 9 சிகரங்களை இமயமலைக்
- உலகின் இளமையான மலைத்தொடர் -இமயமலை
- இந்தியாவின் மிகப்பழமையான மடிப்பு மலைத் தொடர் ஆரவல்லி மலைத் தொடர்
- இமயமலை பரவியுள்ள மாநிலங்கள்
- ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்திரப்பிரதேசம். உத்ராஞ்சல், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம்.
- இமயமலைகளை மேற்கிலிருந்து கிழக்காக 3 உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. மேற்கு இமயமலைகள் (அ) ட்ரான்ஸ் இமயமலைகள்
2. மத்திய இமயமலைகள் (அ) இமயமலைகள்
3. கிழக்கு இமயமலைகள் (அ) பூர்வாஞ்சல் குன்றுகள்
1. மேற்கு இமயமலைகள் (அ) டிரான்ஸ் இமயமலைகள்
- மேற்கு இமயமலை ஜம்மு – காஷ்மீர், திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
- இதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக காணப்படுவதால் திபெத்தியன் இமயமலை என அழைக்கப்படுகிறது.
- வடமேற்கு இந்தியாவில் உள்ள பாமீர் முடிச்சிலிருந்து கிழக்கே காரகோரம் மலைகள் வரை செல்கின்றன.
- இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும். மையப்பகுதிகளில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
- இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
- இப்பாறைகளின் ஒரு பகுதி உருமாறிய பாறைப் படிமங்களாக இமயமலைத் தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது.
- இதன் உயர்ந்த சிகரம் K, (காட்வின் ஆஸ்டின் 8611 மீ)
- இந்தியாவின் உயர்ந்த சிகரம், உலகின் 2 வது உயர்ந்த சிகரம்.
- K2, ஆசாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ளது.
- இங்குள்ள முக்கிய மலைத்தொடர்கள் – சாஸ்கர். லடாக், கைலாஷ், காரகோரம்
- தென்மேற்கு காஷ்மீரில் உள்ள காரகோர ஆப்கானிஸ்தானிஸ்கும், சீனாவிற்கும் எல்லைகளாக உள்ளன. மலைத்தொடர்
- பல்டோரா, சியாச்சின் போன்ற பனியாறுகள் இங்கு காணப்படுகிறது.
இந்திய இராணுவத்தின் சவால் நிறைந்த பகுதி – சியாச்சின்.
- இந்தியாவின் புனித தலங்களான கைலாச மலை, மானோசரோவர் ஏரி ஆகியவை இங்கு உள்ளன.
- லடாக் ஜாஸ்கர் போன்ற மலைத்தொடர்கள் இதில் அமைந்துள்ளன. லடாக் மலைத்தொடரின் தொடர்ச்சியாக லடாக் பீடபூமி அமைந்துள்ளது.
- இந்தியாவின் உயர்ந்த பீடபூமி -லடாக் பீடபூமி
உலகின் உயர்ந்த பீடபூமி – திபெத் பீடபூமி
- உலகின் மிகப்பெரிய எரிமலை பீடபூமி – தக்காண பீடபூமி
2. மத்திய இமயமலைகள் (அ) இமயமலைகள்
- இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
- இது ஒர இளம் மடிப்பு மலையாகும்.
- வடக்கே இருந்த யுரேசியா (Eurasia) நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் (Gondwana Land Mass) ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது. இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.
- பாமீர் முடிச்சிலிருந்து தென்கிழக்கு திசை நோக்கிச் செல்லும் இமயமலைகள் மத்திய இமயமலைகள் எனப்படும்.
- இதில் வடக்கு தெற்காக 3 மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.
1. இமாத்ரி (அ) பெரிய இமயமலைகள் (அ) உள் இமயமலை
2. இமாச்சல் (அ) சிறிய இமயமலை (அ) மத்திய இமயமலை
3. சிவாலிக் (அ) வெளி இமயமலை
1. இமாத்ரி (அ) பெரிய இமயமலை (இ) உள் இமயமலை
- உள் இமயமலை, மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது.
- இமயமலையின் வடக்கு மலைத்தொடர் இமாத்ரி என அழைக்கப்படுகிறது.
- இம்மலைத்தொடர் வடமேற்கு சிந்து பள்ளத்தாக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை நீண்டுள்ளது.
- சராசரி அகலம் -25 கி.மீ
- சராசரி உயரம் -6000 மீ
- சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
- இது மற்ற அமைந்துள்ளது. மலைத்தொடர்களைவிட தொடர்ச்சியான மலைத்தொடராக
- மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும் போது இப்பகுதியில் பௌதீக சிதைவாகவே உள்ளது.
- இமாத்ரியின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் (8848 மீ -நேபாளம்) நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் சாகர் மாதா என அழைக்கப்படுகிறது.
- இது பாமீர் முடிச்சிற்கும். ஹிந்துஸ், காரகோர மலைத்தொடர்களுக்கும் இடையே தொடர்பினை ஏற்படுத்துகிறது.
- உலகின் கூரை எனப்படும் பாமீர் முடிச்சு திபெத்தில் உள்ளது.
- இம்மலைத்தொடர் பள்ளத்தாக்குகளாலும், பீடபூமிகளாலும் அறுபட்டு காணப்படுகிறது.
- இம்மலையில் எப்போதும் நிரந்தரமாக பனி சூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன.
கணவாய்கள்
- மலைகளின் குறுக்கே காணப்படும் இயற்கை பாதைகள் கணவாய்கள் எனப்படும்.
சிக்கிம் – நாதுலா, ஜலபுலா, ஜெலிப்லா
இமாச்சல பிரதேஷ் – சொஜிலா, சிப்கிலா
காஷ்மீர் – காரகோரம் கணவாய்.
இமயமலையின் பிற கணவாய்கள்
- அருணாச்சல பிரதேஷ் – பொமிடிலா கணவாய்
2. இமாச்சல் (அ) சிறிய இமயமலை
- வடக்கே ஹிமாத்திரிக்கும் தெற்கே சிவாலிக் மலைக்கும் இடையில் அமைந்துள்ளது.
சராசரி அகலம் 80 கி.மீ
சராசரி உயரம் – 3500 மீ முதல் 4500 மீ வரை
- வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் மணற்பாறைகள் இத்தொடரில் காணப்படுகின்றன.
- இது பிளவுபட்ட மேட்டு நிலங்களையும். கரடு முரடான தகவமைப்பையும் கொண்டது.
- நகரமயமாதல் காடுகள் அழிப்பு மற்றும் மிக அதிக மழைப்பொழிவின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது.
- இமாச்சலின் நீண்ட மலைத்தொடர் – பீர்பாஞ்சன் (காஷ்மீர்)
பிற மலைத்தொடர் – தவ்லதார், மகாபாரத்
- ஜம்மு காஷ்மீரில் உள்ள தவ்லதார் மலைத்தொடர். இமாச்சலப் பிரதேஷ் வரை நீண்டு காணப்படுகிறது.
இதன் இடையில் உள்ள பள்ளத்தாக்குகள் – காஷ்மீர். காங்கிரா, கு
- முக்கிய மலை வாழிடங்கள்
சிம்லா (HP), டார்ஜிலிங் (WB).
முசௌரி, நைனிடால், அல்மோரா (உத்தரகான்ட்),
பாகல்கம் (ஸ்ரீநகர்), ராணிகட்ட
புனித தளங்கள்
அமர்நாத், வைஷ்ணவி கோவில் (ஜம்மு, காஷ்மீர்)
கேதர்நாத், பத்ரிநாத் (உத்திரபிரதேசம்)
- ஸ்ரீநகர், ஜம்மு இடையே காணப்படும் கணவாய் போக்குவரத்திற்கு உதவுகிறது.
3. சிவாலிக் (அ) வெளி இமயமலை
- இது மேற்கில் பட்வார் பீடபூமியில் இருந்து கிழக்கில் பிரம்மபுத்திரா வரை பரவியுள்ளது.
அதாவது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை பரவியுள்ளது.
- இவை களிமண்ணாலும், மென் பாறைகளாலும் ஆன தொடர்ச்சியற்ற மலைத் தொடராகும்.
- இத்தொடரின் ஒரு பகுதி ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது. இதன் உயரம் 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது.
- இதன் சராசரி உயரம் – 1000 மீ
- இதன் சராசரி அகலமானது மேற்கில் 50 கி.மீ முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது.
- சிவாலிக் பகுதிகளில் டூன்கள் எனப்படும் பள்ளத்தாக்குகள் காணப்படுகிறது. உதா) டேராடூன்
- இவை கிழக்குப் பகுதியில் டூயர்ஸ் எனவும், மேற்கு பகுதியில் டூன்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
- இப்பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.
- ஆறுகளால் கொண்டு வரப்படும் மென்துகள்கள், சிவாலிக்கின் தென்பகுதியில் தராய் சமவெளியை உருவாக்குகின்றன.
- இது சதுப்பு நிலங்கள் உருவாக உதவுகிறது.
3. கிழக்கு இமயமலைகள் (அ) பூர்வாஞ்சல் குன்றுகள்
- இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
- இப்பகுதியில் இமயமலைகள் தெற்கு நோக்கி திரும்பி, இந்தியாவிற்கும் பர்மாவிற்கும் எல்லையாக உள்ளன.
- பெரும்பான்மையான குன்றுகள் மியான்மர் (பர்மா) மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
- டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ. காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகிறது.
- வடக்கில் நாகா. பட்காய் குன்றுகளும், தெற்கில் மீசோ குன்றுகளும் காணப்படுகிறது. (மேகாலயா)
- கிழக்கு மேற்காக ஜெயந்தியா, காரோ, காசி குன்றுகள் காணப்படுகிறது.
- பிரம்மபுத்திரா ஆறு இமயமலையின் கிழக்கோரப் புவி எல்லையாக உள்ளது..
குறிப்பு:
1. காஷ்மீர்,பஞ்சாப், இமாச்சல் இமயமலைகள் – சிந்து, சட்லெஜ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.
2. குமாயூன் இமயமலைகள் அமைந்துள்ளது. சட்லெஜ், காளி ஆறுகளுக்கிடையே
3. மத்திய நேபாள இமயமலைகள் அமைந்துள்ளது. காளி, திஸ்தா ஆறுகளுக்கிடையே
4. அசாம் கிழக்கு இமயமலைகள் அமைந்துள்ளது. திஸ்தா, திகாங் ஆறுகளுக்கிடையே
இமயமலை உருவான விதம்
- பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட நிலப்பகுதி பாஞ்சியா எனப்பட்டது.
- அதை சுற்றியிருந்த நீர்ப்பகுதி பாந்தலாசா எனப்பட்டது.
- பாஞ்சியா பிறகு இருபகுதிகளாகப் பிரிந்து வடபகுதி அங்காரா எனவும், தென் பகுதி கோண்டுவானா எனவும் பிரிந்தது.
- இந்த இரண்டு நிலப்பகுதியை பிரிக்கும் நீர்ப்பகுதி டெத்தீஸ் கடல் எனப்பட்டது.
- அங்காரா. கோண்டுவானா பகுதியிலிருந்து உருவாகி வரும் ஆறுகள் தான் கொண்டு வந்த படிவுகளை டெத்தீஸ் கடலில் படியவைத்தன.
இப்படிவுகள் புவியின் உள் இயக்க சக்தி விசைகளால் உயர்ந்து இமயமலைகள் என்றழைக்கப்படும் மடிப்பு மலைகளை உருவாக்கின.